Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : பூக்களின் கதை
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : PPMN:2015-05-02-028
ISBN : 978-955-0367-27-6
EPABNo : EPAB/2/19258
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): பத்மம் பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 280.00
Edition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : பூக்களின் கதை
ISBN :
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2015
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Content (உள்ளடக்கம்):

    
அன்று படித்த பாடம்

அன்றொரு நாள் பூக்களைப் பற்றி ஆசிரியர் கற்பித்தார். 

அந்த நினைவுகள் வந்தன.

உலகில் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட பூவகைகள் உண்டு.

சின்னஞ் சிறிய பூக்களும் உண்டு. 

ஒரு மீட்டருக்கும் மேற்பட்ட அகலமுடைய 

பெரும் பூக்களும் உண்டு.

தனியாக மலரும் பூக்களும் உண்டு. 

கொத்தாக மலரும் பூக்களும் உண்டு.

கொத்துப் பூக்கள் மஞ்சரி எனப்படும்.

பூக்களில் ஏராளமான இனங்கள் உண்டு.

தானியங்களை உருவாக்கும் பூக்கள் உண்டு. 

பழங்களை உருவாக்கும் பூக்கள் உண்டு.

அது இரண்டாம் வகுப்பில் படித்த பாடம். 

இப்போ நினைவுக்கு வந்தது.

வகுப்பு உயர்ந்து செல்லும். 

பூக்களைப் பற்றி மேலும் விரிவாகப் படிப்போம்.

அப்போது செவ்வந்தி பாடத் தொடங்கினாள். 

'செவ்வந்திப் பூப் பாடுகின்றதா? 

அல்லது செவ்வந்தி அக்கா பாடுகின்றாரா? 

என்று யதுகுலன் கேட்டான். 

செவ்வந்தி அக்காவே பாடினார்.

Full Description (முழுவிபரம்):

இன்னும் சிறார் இலக்கியம் தமிழில் 
வளர்ச்சியடையாத துறையாகவே இருந்து வருகின்றது. 
இன்றுவரை இத்துறையில்  à®®à®°à®ªà¯à®µà®´à®¿à®šà¯ சிந்தனைகளின்ஆதிக்கம் 
வலுவாகவே உள்ளது.

குறிப்பாக சிறார்களுக்கான கதைகளில் கட்டாயமாக 
ஒரு நீதியோ அல்லது ஒரு பாடமோ இருக்க வேண்டுமென்ற கருத்தேற்றம் 
மிகுந்த செல்வாக்குச் செலுத்துகின்றது.

இந்தப் பழைய மரபிலிருந்து விடுபட்டு புதிதாகச் சிந்திக்கும் 
படைக்கும் பண்பு கொண்டவராக சபா.ஜெயராசா விளங்குகின்றார்.
இவர் சிறார் இலக்கியத்தை வளம்படுத்துவதையும் 
தமது முதன்மை நோக்கமாகக் கொண்டவர். 
சிறார்கள் வாசித்து இன்புறுவது மட்டுமல்ல, 
தமது ஆளுமையையும் ஆக்கத் திறன்களையும் 
வளர்த்தெடுக்கும் உபாயங்களை ஆக்கங்கள் வழியே 
முன்னெடுத்துச் செல்பவர்.