Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : மீன்களின் கதை
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : PPMN:2015-01-02-026
ISBN : 978-955-0367-25-2
EPABNo : EPAB/2/19256
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): பத்மம் பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 280.00
Edition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : மீன்களின் கதை
ISBN :
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2015
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 12
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Content (உள்ளடக்கம்):


அப்போது ஆசிரியர் அங்கே வந்தார். 

மீன்களைப் பற்றி மேலும் சொன்னார். 

மீன்களுக்கு முள்ளந்தண்டு உண்டு. 

அது ஒரு சிறப்பு எனலாம்.

 à®®à¯€à®©à¯à®•à®³à®¿à®²à¯ பல்வேறு இனங்கள் உண்டு. 

பல வண்ணங்களிலும் உண்டு. 

பல வடிவங்களிலும் உண்டு. 

பாம்பு போன்ற வடிவமுடைய மீன்களும் உண்டு. 

மீன்கள் தமது செதில்களினால் சுவாசிக்கும். 

சூழலுக்கு ஏற்ற குருதி இயல்பையும் கொண்டிருக்கும். 

பெரிய மீன்கள் சிறிய மீன்களை உணவாகக் கொள்ளும். 

சிறிய மீன்கள் சிறிய தாவரங்களை உண்ணும். 

மிதக்கும் உணவுகளையும் உண்ணும்.

திமிங்கிலம் மிகவும் பெரியது. 

 

ஒரு யானையை வைத்திருக்கக் கூடிய 

பெரிய வயிற்றைக் கொண்டது. 

திமிங்கிலம் மிகவும் பெரிய பிராணி. 

படகுகளையும் அது புரட்டி விடக்கூடியது. 

டொல்பின் தண்ணீரில் விளையாட்டுக்களைச் செய்யும். 

மீன்கள் மனிதருக்கு உணவாகின்றன. 

அவை அதிக சத்துக்கள் கொண்ட உணவாகும்.

கடல் நீரில் மீன்கள் வளர்கின்றன. 

நல்ல தண்ணீரில் வளரும் மீன்களும் உண்டு. 

அதற்காக மீன் பண்ணைகளை அமைக்கின்றார்கள். 

Full Description (முழுவிபரம்):

இன்னும் சிறார் இலக்கியம் தமிழில் 
வளர்ச்சியடையாத துறையாகவே இருந்து வருகின்றது. 
இன்றுவரை இத்துறையில்  à®®à®°à®ªà¯à®µà®´à®¿à®šà¯ சிந்தனைகளின்ஆதிக்கம் 
வலுவாகவே உள்ளது.

குறிப்பாக சிறார்களுக்கான கதைகளில் கட்டாயமாக 
ஒரு நீதியோ அல்லது ஒரு பாடமோ இருக்க வேண்டுமென்ற கருத்தேற்றம் 
மிகுந்த செல்வாக்குச் செலுத்துகின்றது.

இந்தப் பழைய மரபிலிருந்து விடுபட்டு புதிதாகச் சிந்திக்கும் 
படைக்கும் பண்பு கொண்டவராக சபா.ஜெயராசா விளங்குகின்றார்.
இவர் சிறார் இலக்கியத்தை வளம்படுத்துவதையும் 
தமது முதன்மை நோக்கமாகக் கொண்டவர். 
சிறார்கள் வாசித்து இன்புறுவது மட்டுமல்ல, 
தமது ஆளுமையையும் ஆக்கத் திறன்களையும் 
வளர்த்தெடுக்கும் உபாயங்களை ஆக்கங்கள் வழியே 
முன்னெடுத்துச் செல்பவர்.