Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : குயிலோசை
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : PPMN:2010-08-03-014
ISBN : 978-955-0367-13-9
EPABNo : EPAB/2/19244
Author Name (எழுதியவர் பெயர்) : செ.து.தெட்சணாமூர்த்தி
Publication (பதிப்பகம்): பத்மம் பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : குயிலோசை
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 24
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 200.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Content (உள்ளடக்கம்):

குயில் ஒன்று கூவுது - அதன் 
குரலோசை என்னை மயக்குது
குயில் கூவும் சோலை
குளிர்ந்த மாஞ் சோலை

குக்குக் கூவென்று கூவும் குயிலே - நீ
குமரன் வரக் கூவுவாய்
அக்காவுக்குத் தெரியாமல் அத்திமரத்திலேறி
இக்காவுக்கு வந்தேன் இன்னுமவன் வரவில்லை

கெந்தி அடிக்கலாம் கிளித்தட்டு மறிக்கலாம்
அந்தி சாயும்வரை ஆனந்தமாய் விளையாடலாம்
சுந்தரப் பூங்குயிலே உன்வாய் திறந்து நீ
செந்தமிழ்க் குமரனை வரும்படி கூவுவாய்

மாந்தளிர் கோதி மதுரகானம் பாடும்
தீந்தமிழ் குரலிசை தித்திக்கும் தேனாறு
பூந்தளிர் மேனிப் பூங்குயிலே நீயும்
காந்தர்வ குரலில் வாவெனக் கூவுவாய். 

Full Description (முழுவிபரம்):

    காலையில் கதிரவன்
        கண் விளிக்க
    காலை புலர்ந்தது
        கதிரொளி பரந்தது

    காலையென்று அறியாமல்
        கன்துயில் கொள்ளலாமோ
    காலை விடிந்தது
        கண்விளித்து வாடி

    சேவல் கூவுது
        செந்தாமரை விரியுது
    கோயில்மணி அடிக்குது
        கூடிக்காகம் கரையுது

    பசுவும் பால் சொரியுத
        பசுக்கன்றும் துள்ளிக் குதிக்குது
    பசும்புல் நுனியில் தங்கிய
        பனித் துளியும் மறையுது

    பூக்கள் எல்லாம் விரியுது
        புதுமணம் எங்கும் பரவுது
    பாக்கள் தீட்டிய
        பாவலர் இருப்பது பாரடியோ.

    பஞ்சனையில் படுத்துறங்கியது போதும்
        பள்ளிச் சிறுவர் படிப்பதைக் கேளடி
    கொஞ்சமும் கூச்சம் இல்லாமல்
        குறட்டை விட்டுத் தூங்கலாமோடி