Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : நல்வழி
Author Name (எழுதியவர் பெயர்) : ந.மு.வேங்கடசாமி நாட்டார் நாவலர் மு.வேங்கடசாமி நாட்டார்
Publication (பதிப்பகம்): பத்மம் பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 40
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 60.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

நம் தமிழ் மன்பதை பல்வேறு பெருமைகளைத் தன்னகத்தே கொண்டிருந்தது என்று சொல்வது வெறும் புகழ்ச்சி இல்லை; அது முற்றிலும் உண்மை! அதற்குப் பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். 
நம்மைச் சற்று முன் கடந்துபோன இருபதாம்  à®¨à¯‚ற்றாண்டில்கூட, 'அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?' என்ற பிற்போக்குத்தனமான கருத்து வேரூன்றியிருந்தது. ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இலக்கணப் புலமையுடன் இலக்கியம் படைத்த பெண்பாற் புலவர்கள் பலர் தமிழ் நாட்டில்  à®µà®¾à®´à¯à®¨à¯à®¤à¯ வந்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத் தக்கவர் ஒளவையார். 
அவர் புலவராக மட்டுமல்லாது, அரசர்களுக் கெல்லாம் அறிவுரை வழங்கி ஆட்சியைச் செம்மைப் படுத்தும் ஆற்றல் பெற்றவராகவும் விளங்கினார். அரசர்களும் 'இவர் பெண்தானே!' என தாழ்வாகக் கருதாமல் அவருக்கு உயரிய மதிப்பளித்து வந்துள் ளமை வரலாற்றுச் செய்திகள் மூலம் தெரிய வருகிறது. இன்றைய இந்தியாவின் நாடாளுமன்றத் திலும் சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு முப்பத்து மூன்று விழுக்காடு ஒதுக்கும் உப்புச் சப்பில்லாத ஒரு தீர்மானத்திற்கே ஒப்புதல் தர அடம்பிடிக்கும் அரசியல் நிலையோடு பழந்தமிழ கத்தை ஒப்பிடும்போது .... அடடா! நமது வழிவழிப் பண்பாட்டுக்கு எதிரான பகைவர் - அயலார் இந்த மண்ணில் நுழைந்த பிறகே இங்கே அனைத்து ஏற்றத் தாழ்வுகளுடன் பெண்ணடிமைத்தனமும் புகுத்தப் பட்டது என்பதை இதன் மூலம் நன்கு உணரலாம்.
அதே ஒளவையார்,
'மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்'
என்று பாடினார். அதாவது, 'மன்னன் மதிப்பு டையவன்  à®¤à®¾à®©à¯; ஆனால் அவனை விடவும் கற்றறிந்த புலவன் மிகவும் சிறப்புக்குரியவன்' எனக் கூறியுள்ளார். 
அவரது காலத்திற்குப் பின், தமிழ்நாட்டில் ஒருவன், மன்னனாகவும் அரசு புரிந்து, கற்றறிந்த புலவராகவும் பாக்கள் இயற்றி 'இரட்டைச் சிறப்பு'ப் பெற்றிருந் ததை அறியும்போது நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை. இத்தகைய வரலாற்றுப் பெருமைக் குரியவர் பழங்காலத்தில் முத்து வணிகத்தில் உலகப் புகழ்பெற்ற கொற்கை நகரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட அதிவீரராம பாண்டியன் என்பவர் ஆவார். 
மேலும்! முல்லைக்குத் தேர் கொடுத்து வள்ளல் தன்மை யில் எல்லையில்லாப் புகழ் பெற்ற பாரியின் உற்ற தோழர் கபிலர் என்பார். இவர் பாரிக்குத் துன்பக் காலத்தில் தோள் கொடுத்ததோடு மட்டுமல்லாது, பாரியின் மறைவுக்குப் பின் அவரின் மகளிர் இருவரின் எதிர்கால வாழ்வுக்காக இமைசோராது  à®‰à®´à¯ˆà®¤à¯à®¤à®µà®°à¯. சிறந்த புலவர். 
தொடர்ந்து, கண்ணன் மகன் கூத்தன் என்பவர் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்த தனால் மதுரைக் கண்ணங் கூத்தனார் என்ற பெயருடன்  à®ªà¯à®²à®®à¯ˆ பெற்று விளங்கினார்.
மற்றும்,பொய்கை என்னும் இடத்தில் பிறந்த தால் பொய் கையார் எனும் இடவாகுபெயர் பெற்ற புலவரும் பழந்தமிழகத்தில் வாழ்ந்திருந்தார். 
இவர்களெல்லாம் சங்க காலங்களைச் சேர்ந்தவர்கள். 
அடுத்து, ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் என்பவர். இவரும் சங்கப்புலவர்களுடன் ஒப்பிடும் அளவு தகுதி பெற்று விளங்கியவர்.
மேற்சொல்லப் பெற்ற அனைவரும் பல்வேறு நூல்களையும் தனிப் பாடல்களையும் இயற்றி, தமிழ் இலக்கியத்திற்கு மிகவும் சிறப்புச் சேர்த்துள்ளனர். 
அவற்றுள், 
ஒளவையாரின் 'ஆத்திசூடி', 'மூதுரை', 'நல்வழி', 'கொன்றைவேந்தன்',
அதிவீரராம பாண்டியரின் 'வெற்றிவேற்கை' எனும் 'நறுந்தொகை',
கபிலரின் 'இன்னா நாற்பது'-
சிவப்பிரகாசரின் 'நன்னெறி'
மதுரைக் கண்ணங் கூத்தனாரின் 'கார் நாற்பது', பொய்கையாரின் 'களவழி நாற்பது' ஆகிய நூல்களுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராக இருந்த பண்டித நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் 1950-களிலேயே உரை எழுதி அவை தமிழ் மக்களிடையே பரவ வழி செய்துள்ளார். 
அவற்றை  'இளையோர் வரிசை' என்னும் பிரிவில் எமது 'பத்மம் பதிப்பகம்' தனித்தனி நூல்களாக வெளிக்கொணர்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஆத்திசூடி, மூதுரை, நல்வழி, கொன்றைவேந்தன், நறுந்தொகை ஆகிய மூல நூல்களைத் தந்துதவி எமக்குப் பாராட்டும்  à®µà®´à®™à¯à®•à®¿ ஊக்குவித்த தஞ்சாவூர், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி நிறுவனர் - பேராசிரியர் திருமிகு பி.விருத்தாசவனார் அவர்களுக்கும், கார்நாற்;பது, களவழி நாற்பது ஆகிய மூல நூல்களைத் தந்துதவிய திருச்சி, 'திருவள்ளுவர் தவச்சாலை' நிறுவனà

Full Description (முழுவிபரம்):

நல்வழி என்பது ஒளவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய எவ்வமறுக்குஞ் செவ்விய தமிழ் நூல்களில் ஒன்று. ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள் அசதிக் கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும், பல தனிப்பாக்களும் ஒளவையார்  à®‡à®¯à®±à¯à®±à®¿à®¯à®© வென்ப. 
தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர்களிலும் பெண்டிர்களிலும், கற்றவரும் கல்லாதவரும் ஆகிய யாவரும் ஒளவையார் என்னும் பெயரை அறிந்திருப்பதற்குக் காரணம் அவரியற்றிய ஆத்திசூடி முதலிய  à®¨à¯€à®¤à®¿ நூல்களேயாகும். தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பெற்ற பெருமை வாய்ந்தவை அவை. தமிழிற் சிறிது பயிற்சியுடையவரெவரும் ஒளவையாரின் நீதி நூல்களில் ஒன்றையாவது படித்தேயிருப்பர். பல  à®ªà¯†à®°à®¿à®¯ நூல்களின் சாரமாகவுள்ள நீதிகளும், கருத்துக் களும் இந்நீதி நூல்களில் தெளிவுற அமைந்து விளங்கு கின்றன. நல்வழியிருள்ள செய்யுட்கள் பல மெய்ந் நூற்களின் முடிந்த கருத்துக்களை விளம்புவதாகும். 
இந்நூலின்கண் திருவைந்தெழுத்தும், திருநீறும் சிறப்பாக எடுத்தோதப்படுவதும், இறுதிச் செய்யுளில் திருக்குறள், திருநான்மறை முடிவு, தேவாரம், முதலிய சைவத்திருமுறைகள் என்னும் இவையெல் லாம் ஒத்த கருத்துடையன எனக் கூறப்படுவதும் பிறவும் ஆக்கியோரின் சமயத்தையும், உண்மை நூலுணர்வையும் புலப்படுத்துவதாகும். மூவர் தமிழை எடுத்தோதியதிலிருந்து இந்நூல் தோன்றிய  à®•à®¾à®²à®®à¯ 9ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாகு மென்பதும் விளக்கமாம். 
இங்ஙனம்
ந.மு.வேங்கடசாமி நாட்டார்