Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : வண்ணத்துப்பூச்சிகளின் கதை
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : PPMN:2015-05-01-027
ISBN : 978-955-0367-26-9
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): பத்மம் பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2015
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 29 cm 21 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 12
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 260.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

வண்ணத்துப் பூச்சிப் பாட்டு

அப்போது பெரிய மாமி அங்கே வந்தார். 

அவர் வண்ணத்துப் பூச்சிகளில் விருப்பம் கொண்டவர். 

அவற்றின் இறகுகளைச் சேகரித்து வைத்திருப்பவர். 

அவர் எங்களைப் பார்த்தார். 

எனக்கும் அக்காவுக்கும் ஒரு பாட்டுப் போட்டி வைத்தார். 

'வண்ணத்துப் பூச்சி பற்றிப் பாட வேண்டும். 

நல்லப் பாட்டுக்குப் பரிசு' என்றார். 

அப்போது நான் ஒரு பாடலைப் பாடினேன். 

 
நீல வண்ணப் பூச்சி
நீண்ட நேரம் பறக்கும்.
பச்சை வண்ணப் பூச்சி
மெத்தப் பறந்தோடும்

மஞ்சள் வண்ணப்பூச்சி
மரங்கள் எங்கும் தாவும் 
சிவப்பு வண்ணப் பூச்சி
சிறகடித்துப் போகும்.

கருமை வண்ணப் பூச்சி
காற்றில் தாவிப் போகும்.
வெள்ளை வண்ணப்பூச்சி
விந்தை பல காட்டும்.
நான் பாடி முடித்தேன்.  à®ªà®¾à®Ÿà¯à®®à¯ பொழுது தாளமும் போட்டேன். 

அடுத்ததாக அக்கா பாடினார். 

வயலோரம் பறந்து வரும் 
வண்ணத்துப் பூச்சி 
வரி வரியாய்ப் பறந்துவரும் 
வண்ணத்துப் பூச்சி.

நதியோரம் பறந்துவரும்
வண்ணத்துப் பூச்சி
நறுமலர்கள் தாவிவரும்
வண்ணத்துப் பூச்சி

மலையோரம் பறந்துவரும்
வண்ணத்துப் பூச்சி
மலர் தாவிப் பறந்து வரும்
வண்ணத்துப் பூச்சி

குடிலோரம் பறந்துவரும்
வண்ணத்துப் பூச்சி
குறுமலர்கள் தாவிவரும் 
வண்ணத்துப் பூச்சி

'இரண்டு பாடல்களும் நன்றாக இருக்கின்றன' என்றார் பெரியமாமி.

இருவருக்கும் பரிசு தந்தார். 

அது வண்ணத்துப் பூச்சி அல்பம். 

வண்ணத்துப் பூச்சிகளின் இறகுகள் அங்கு ஒட்டப்பட்டிருந்தன. 

மிக அழகாக இருந்தது. 

Full Description (முழுவிபரம்):

இன்னும் சிறார் இலக்கியம் தமிழில் 
வளர்ச்சியடையாத துறையாகவே இருந்து வருகின்றது. 
இன்றுவரை இத்துறையில்  à®®à®°à®ªà¯à®µà®´à®¿à®šà¯ சிந்தனைகளின்ஆதிக்கம் 
வலுவாகவே உள்ளது.

குறிப்பாக சிறார்களுக்கான கதைகளில் கட்டாயமாக 
ஒரு நீதியோ அல்லது ஒரு பாடமோ இருக்க வேண்டுமென்ற கருத்தேற்றம் 
மிகுந்த செல்வாக்குச் செலுத்துகின்றது.

இந்தப் பழைய மரபிலிருந்து விடுபட்டு புதிதாகச் சிந்திக்கும் 
படைக்கும் பண்பு கொண்டவராக சபா.ஜெயராசா விளங்குகின்றார்.
இவர் சிறார் இலக்கியத்தை வளம்படுத்துவதையும் 
தமது முதன்மை நோக்கமாகக் கொண்டவர். 
சிறார்கள் வாசித்து இன்புறுவது மட்டுமல்ல, 
தமது ஆளுமையையும் ஆக்கத் திறன்களையும் 
வளர்த்தெடுக்கும் உபாயங்களை ஆக்கங்கள் வழியே 
முன்னெடுத்துச் செல்பவர். 

ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : வண்ணத்துப்பூச்சிகளின் கதை
Edition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு