புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கடலின் துயரம்

இந்த சிறுவர் அரங்கு 'இயற்கையானது, மனிதனின் செயற்பாடுகளால் எவ்விதம் பாதிக்கப்படுகின்றது என்பது பற்றி அறியவும் அது தொடர்பாக சிறார்களிடையே மனப்பாங்கில் சில மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்காகவும் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த அரங்க உருவாக்கத்தின் போது இதில் பங்குப்பற்றிய சிறார்கள் அனைவரும் இவ்விடயம் பற்றி முழுமையாக உணர்த்தும் மூலக்கதையினை வாசித்தும் பல்வேறு கலந்துரையாடல் களை  தமக்குள் நிகழ்த்தியும் இருந்தனர்.  தொடர்ச்சியான இச்செயற்பாட்டின் விளைவாக பாடல்களையும், உரையாடல்களையும் புதிதளித்தல் முறையில் உணர்வு நிலையில் நின்று இயம்பினர். இச்சிறார்களின் வார்த்தை களின் ஊடாக வந்த இப்படைப்பு, ஆற்றுகையின் பின்பு முழுமையான பிரதியாக மெருகுபடுத்தப்பட்டு இங்கு வெளியிடப்படுகின்றது'


கோகிலா மகேந்திரன்
Kokila Mahendiran

தெல்லிப்பழை மகாஜனா அன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வியான கோகிலா மகேந்திரன் அவர்கள் ஆசிரியர், அதிபர், கல்வி நிர்வாகி, எழுத்தாளர், பேச்சாளர், நாடகாசிரியர், உளவியலாளர் எனப் பன்முக ஆளுமை பெற்று மிளிர்ந்து வருபவர். தனது ஆழமான, வித்தியாசமான உளவியல் கண்ணோட்டத்தாலும் எதையும் நூறு சதவீதம் சரியாகச் செய்ய விளையும் முனைப்பினாலும் தாம் தொட்ட துறைகளிலெல்லாம் மாற்றத்தை ஏற்படுத்தியவர்.

அவலத்தில் வாழ்கின்ற எம் மக்களுக்கு இரண்டு தசாப்த்தங்களாக உளவளத்துணை வழங்கிப் பலரின் வாழ்வுக்கு உரமூட்டியவர்.

'மற்றவர்களுக்குப் பயன் உடையதாய் வாழ்தலே வெற்றிகரமான வாழ்க்கை' என்று தனது மாணவர்களுக்கு எப்போதும் கூறும் கோகிலா மகேந்திரன் தமிது பல்துறை ஆளுமையை அதி உச்ச அளவிற்குப்