புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்விச் சமூகவியல்

இன்று தமிழ்ச்சூழலில் சமூகவியல், மானிடவியல் போன்ற கற்கையென்பது பரவலாக்கப்பட வேண்டிய கட்டத்திலேயே உள்ளது. இவை சார்ந்த அடிப்படையான நூல்கள் மற்றும் இத்துறைசார் கோட்பாடுகளின் பின்புலத்தில் எழுதப்படும் கட்டுரைகள் எம்மிடையே போதியளவு வளர்ச்சியடையவில்லை. இதனால், எமது சிந்தனை, தேடல், கற்கை, ஆய்வு போன்ற அம்சங்களில் சமூகவியல், மானிடவியல் போன்ற துறைகளின் தாக்கம் முழுமையாக ஆழமாகச் செல்வாக்குச் செலுத்தவில்லை.
தமிழ் நாட்டுப் பின்புலத்தில் சமூகவியல், மானிடவியல் போன்ற துறைகளில் அடிப்படையான சில நூல்கள் இன்று தமிழில் வெளிவரக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன.  தமிழில் 'நாட்டார் வழக்காற்றியல்' துறை இன்று வளர்ந்து வரும் அறிவுத் துறைகளில் ஒன்றாக விருத்தி பெற்று வருகிறது. ஆரம்பத்தில் இத்துறை இந்தியவியல், மானிடவியல், மொழித்துறைகளின் பகுதியாகச் செயல்பட்ட 'நாட்டார் வழக்காற்றியல்' இன்று தனியொரு துறையாக தமிழகப் பல்கலைக்கழகங்களில் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டார் வழக்காற்றியல்துறை மானிடவியல், சமூகவியல், உளவியல், தத்துவம், வரலாறு, மொழியியல், பண்பாட்டியல் ஆகிய துறைகளுடன் பின்னிப்பிணைந்துள்ளது. 
1980களுக்குப் பிறகு 'நாட்டார் வழக்காற்றியல்' சமூக அறிவியல் ஆய்வுப் புலத்தில் முக்கியமான ஓர் ஆய்வுத்துறையாகவும் கற்கையாகவும் பரிணாமம் பெற்று வருகிறது. இதனால் தமிழில் பல்வேறு கோட்பாட்டு நூல்கள் அவை சார்ந்த ஆய்வுகள் பல்கிப் பெருகி வருகின்றன. சமூகவியல் துறையின் அறிவாராய்ச்சி மரபு வரன் முறையான ஒழுகலாறு சார்ந்த கலாசாரமாக மாற்றமடைந்து வருகின்றன. பன்முக சமூகப் பண்பாட்ட


முகிலன்
Mukilan

        உணர்வுகளின் வலிகளும் வசந்தங்களும் கவிதைகளாக மலரும். ஈழத்தமிழ் வரலாற்றில் உணர்வுகளில் வலிகளை சுமந்த இளைஞர்களே அதிகம். அவை சொந்த சுமைகளின் வரிகள் அல்ல சமூகத்தின் இருப்பில் முனைப்புற்று நின்ற வாழ்வின் வலிகள். அது நெடுந்தீவு முகிலனையும் விட்டுவைக்கவில்லை. 
வறுமை தீயில்
எரியும்
சின்னப் பூக்களின்
வரலாறு
வருங்கால
அகராதியில்
எழுதப்படாமல் 
போகப்போகிறது
       என்று சொல்வதிலும்
திரும்பவும் 
இந்த தேசம் என்றால்
வேண்டாம் எனக்கு
மறுபிறவி
       என்பதிலும் சமூகத்தின் காயத்தின் வலிகளை உணரும் ஒரு கவிஞன் தெரிகிறான். சொல்வதினூடாக சொல்லாதவற்றையும் உணர வைக்கும் கவிதை வரிகளுக்காக நெடுந்தீவு முகிலனுக்கு பாராட்டுக்கள். 
மரபார்ந்த சிந்தனைகளில் இருந்து விலகி மனிதம் தேடும் இந்தக் கவிஞன் பெண்ணின் படிமத்தை மட்டும் மரபார