புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

இசையும் சமூகமும்

பொதுவாக எங்கும் இசை இல்லாச் சமூகங்கள் எதுவும் இல்லை. எந்த ஒரு சமூகமும் அதற்கான இசையும் ஆடலும் இன்றி இருந்ததில்லை. ஒரு நிலையில் இசையே மொழி, விஞ்ஞானம், தொன்மம், மதம் மற்றும் சங்கேத உத்திகள் அனைத்துக்கும் மூலமாக இருந்துள்ளது. 
தொல் சமூகங்கள் உணவுப் பொருள் சேமிக்கவும் வேட்டை-யாடவுமான கருவிக்கு அடுத்தபடியாக இசைக் கருவிகளைக் கண்டுபிடித்திருக்கின்றன. மனிதர்களை ஒருங்கிணைக்கும் முறைமையில் இசைக்கருவிகள் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளன. இசை எல்லோரது நினைவுகளிலும் நடத்தைக் கோலங்களிலும் சிந்தனையிலும் செல்வாக்கு வகிக்கின்றன. ஆக தனிமனித உணர்வு-களையும் மீறிய ஒரு சமூகப் படிமமாகவே இசை விளங்குகின்றது. இசை உணர்வுகள் சமூக இருப்பிலிருந்தே கிளர்ந்தெழுகின்றன. தொல் சமூகங்களது நீண்ட இருப்பு வன்முக இசை உணர்வுகளின் உருவாக்கத்துக்குக் காரணமாகிறது. இன்னொருபுறம் சில அடிப்ப-டையான வகைப்பாட்டுக்குள் அடங்கும் பண்புகளையும் கொண்-டுள்ளன. இது தொன்ம இசைக்கு மட்டுமன்றி நவீன இசைகளுக்கும் நன்கு பொருந்தும்.
இசையை நாம் பயன்பாட்டு இசை மற்றும் அழகியல் இசை என ஒரு பெரும் பிரிவுகளாக வகுத்து நோக்கலாம். பயன்பாட்டு இசை மதச் சடங்குகள் சமூகச் சடங்ககள் வாழ்வியல் சடங்குகள் இவற்றுடன் நேரடித் தொடர்புடையவை. இவற்றுடன் மாந்திரிகம், மருத்துவம், வழிபாடு உபாசனை என்பனவும் சேர்ந்து கொள்-கின்றன. மந்திரமும் சடங்குகளும் புராதன கிராமிய வாழ்க்கையின் அறிகைக் கோலங்களையும் வெளிப்படுத்தின. சமூக வாழ்வின் அத்தனை தருணங்களும் இசையின் துணையின்றி நடக்காது. இந்த நிலை தொல்சமூகங்களுக்கும் நவீன சமூகங்களுக்கும்


க.குணராசா ( செங்கை ஆழியான் )
Kunarasa, K

கந்தையா குணராசா ஈழத்துத் தமிழ் இலக்கியச் சூழலில் செங்கை ஆழியான் ஆக அடையாளம் காட்டுபவர். இவர் சிறுகதை, நாவல், ஆய்வு, தொகுப்பு எனப் பன்முக்க் களங்களில் இயங்குபவர். இவரது படைப்பாளுமையால் மிக வெற்றிகரமான எழுத்தாளர் எனும் அந்தஸ்துக்கு உரித்தானவர். 1960களின் நடுப்பகுதியில் இருந்து இன்றைய காலம்வரை செங்கை ஆழியான் பெயரைத் தவிர்த்து ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்படமுடியாது.

இவர் தொகுத்த மறுமலர்ச்சிக் கதைகள், ஈழகேசரிக்கதைகள், முன்னோடிச் சிறுகதைகள் போன்றவை ஈழத்துச் சிறுகதை வரலாற்றை மீள் வாசிப்புக்கு உள்ளாக்கும் விமரிசனப் பண்புகள் கொண்டவை. இத்தொகுப்பு முயற்சியில் இவர் ஈடுபட்டதன் மூலம் இலக்கிய வரலாறு எழுதியலுக்குப் புதுவளம் சேர்க்கின்றார். இதன் பிறிதொரு அடையாளமாகவே ஈழத்துத் தமிழ் சிறுக