புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

தமிழர் கல்விச் சிந்தனைகள்

பல்கலைக்கழகங்கள், கல்வியியற் கல்லூரிகள், ஆசிரிய கலாசாலைகள் ஆகியவற்றில் மேலைப்புலக் கல்விச் சிந்தனைகள் முதன்மைப்பாட்டுடன் கற்பிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் மரபில் கல்விச் சிந்தனைகள் உருவாக்கம் பெறவில்லையா என்ற வினாவுக்கு விடை தரும் வகையில் இந்நூலாக்கம் இடம்பெற்றுள்ளது.
பல்வேறு கோணங்களில் இருந்து எழுகோலம் பெற்ற தமிழர் கல்விச் சிந்தனைகள் இந்நூலில் விரிவாக இடம்பெற்றுள்ளன.
தமிழ்த் தேசியம் பற்றிய சிந்தனைகள் சங்கப் பாடல்களில் இருந்தே மேற்கிளம்பத் தொடங்கின என்ற கருத்தைப் பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் தமிழ் வீரயுகப்பாடல் தொடர்பான ஆய்விலே குறித்துரைத்துள்ளார்.
தமிழ்த் தேசிய உருவாக்கத்தில் கல்விச் சிந்தனைகளின் வகிபாகத்தைக் கண்டு கொள்வதற்கும் இந்நூல் துணை செய்யும். 
பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட தமிழர் கல்விச் சிந்தனைகள் கல்வியியலில் ஒரு தனிப்பாடமாகவோ, ஒரு தனி இதவடிவம் (ஆழனரடந) என்ற நிலையிலோ ஆக்கம் பெறுவதற்குரிய புலமைக் கனதியைக் கொண்டிருத்தலைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
தமிழரின் கல்விச் சிந்தனைகள் பற்றிய கருத்து வினைப்பாடுகள் மேலும் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்ற முன்மொழிவுடன், 

சபா.ஜெயராசா


ரஸ்மின், எம்.சி
Rasmin, M.C


இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் சமூகவானொலி எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்த முடியும் என்பதை விளக்கும் ஒரு நூல்கூட இதுவரை இலங்கையில் வெளியிடப்படவில்லை. சில உதிரியான கட்டுரைகள் சிங்களத்திலும் தமிழிலும் வெளிவந்தபோதும் சமூகவானொலியை ஒரு துறையாகக் கற்பதற்கு அவை எந்தவிதத்திலும் போதியவையல்ல. தாய்மொழியில் ஊடகக்கற்கையை மேற்கொள்ளும் மாணவர்களின் நலன்கருதியே இத்தகைய ஒரு நூலை எழுத வேண்டியேற்பட்டது. 

இலங்கையின் பல்கலைக்கழகங்களில் ஊடகம், அபிவிருத் திக்கான தொடர்பாடல் என்பன கடந்தபல ஆண்டுகளாக போதிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சமூக அபிவிருத்திக்கு ஊடகத்தின் பங்கும் பணியும் பற்றிய அலகுகள் திருப்திப்படக்கூடிய நிலையில் இல்லை. தகவல் தொழில்நுட்பத்தின் உள்ளூர் மயமாக்கத்துடன் அபிவிருத்தி மற்றும் அபிவிருத்திக்கான தொடர்பாடல் போன்ற எண்ணக் கருக்கள் புத