புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

தொன்மைச் செம்மொழி தமிழ்

கால்டுவெல் 1856இல் தமது 'தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணத்தை' வெளியிட்டதுமே உலக மொழியியலறிஞர்கள் தமிழின் தொன்மை, முன்மை, செம்மை முதலியவற்றையும், ஞால முதன் மொழிக்குத் தமிழ் மிக நெருங்கியதாக நிறுவப்பட வாய்ப்பு இருப்பதையும் உணர்ந்தனர். எனினும் 'செம்மொழி' என ஒரு மொழியை ஏற்றிடத் தொன்மைமொழியாயினும் அம்மொழி இலக்கியம் சிறந்ததாகவும், தனித்தன்மை வர்ந்ததாகவும், பிறமொழி இலக்கியங்களை அடியொற்றி உருவாகாததுமாகவும் இருக்க வேண்டும். 1850 க்குப் பின்னர்தான் தொல்காப்பியம் முதலான சங்க இலக்கிங்கள் அச்சிட்டு வெளியிடப்பட்டன. 1900 அளவிலேயே மொழி அடிப்படையிலும் சரி. இலக்கிய அடிப்படையிலும் சரி, தமிழ் செம்மொழியே என்பதை உலக அறிஞருலகம் ஏற்றுக் கொண்டது. இந்திய நடுவண் அரசு அளவில், தமிழ் மொழி செம்மொழி என மிகக் காலம் தாழ்ந்து 2004இல் தான் ஏற்கப்பட்டது. இதற்கு பலரும் காரணமாவர் - தமிழர்களாகிய நாம் உட்பட, செம்மொழி கோரிக்கை வரலாற்றை இந்நூல் இயல் இரண்டில் காண்க.
காலப் பழமையால் வைரம் பாய்ந்து!
நாகரிகத்தின் நாற்றங் காலது
எம்மொழிக்கும் அது ஈடிணையற்ற
செம்மொழி! உலகச் சிந்தனைக்கெல்லாம்
ஊற்றாய்த் துலங்கும் உண்மையின் பைஞ்சுனை!

 


முத்து இராதாகிருஷ்ணன்
Muthu Rathakrishnan

வடக்கு மாகாணக்கல்வித் திணைக்களத்தில் மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றுபவர். இலங்கை கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்தவர். இவர் எழுத்தாளர், ஓவியர், நாடகவியலாளர், சிறுவர் அரங்கச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருபவர். சிறுவர்களின் சுயாதீனம், சுதந்திரச் செயற்பாடு, ஆக்க வெளிப்பாடு பற்றிய தெளிவான சிந்தனை கொண்டவர்.

சிறுவர் அரங்கு சிறுவர்களின் முழுமையான பங்கு பற்றலுடன் முகிழ்ந்தெழும் ஒரு செயற்பாடாகும். சிறார்களின் உடல் மேம்பாடு, உளமேம்பாடு, மனவெழுச்சி மேம்பாடு ஆகியவையே அவர்களின் ஈடுபாட்டுடன் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றன.  இவ்வகையில் சிறுவர் அரங்கு பற்றிய இந்நூலைப் படைத்துள்ளார்.