புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்வியியற் பதிவுகளும் பண்புசார் விருத்தியும்

சமகாலத்தில் கல்வியியல் எழுத்துகளின் ஆக்கங்களின் மறும் ஆய்வுகளின் முனைப்பு பல்பரிமாணங்களில் வெளிப்படுகின்றது. சமூக மட்டங்களில் கல்விசார் பிரச்சினைகளும் பல்வேறு கோலங்களில் விரிவுபெறுகின்றது. இதனால் கல்வியில் குவியப்படும் சிந்தனைகளும் வினைப்பாடுகளும் ஆய்வில் பண்புகளை தழுவியதாக மேற்கிளம்புகின்றது. 
இன்று கல்விப் பணிகளில் ஈடுபடக்கூடிய ஒருவர் புத்தாக்கச் சிந்தனைகளில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் மாற்றத்தை உருவாக்கும்;;; மகிழ்ச்சிகரமான கல்விப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியும். இதற்கு சமூகப் பொறுப்பும் சமூக உணர்வும் மற்றும் புலமைப் பயிற்சியும் வேண்டும். இந்த பின்புலத்தில்தான் முனைவர் தி.கமலநாதன் அவர்களது 'கல்வியியற் பதிவுகளும் பண்புசார் விருத்திகளும்' எனும் நூல் வெளிவருகின்றது.
இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் சமகாலக் கல்விப் பரப்பில் எழுந்துள்ள நடைமுறைகளை விளங்கவும் விளக்கவும் முற்பட்டதன் விளைவாகவே உருவாகியுள்ளது எனலாம். இவை புதிய அறிவையும் புதிய அனுபவங்களையும் ஒன்றிணைத்து புதிய கல்விக் கோலங்களைப் படைக்கும் திறன் பெற்றதாகவே விரிவுபடுகின்றது. 
நூலின் மையமாக இழையோடும் சிந்தனைவீச்சி சமகால கல்விசார் பிரச்சினைகளை புதிய கோணங்களில் புதிய கலங்களில் பார்க்கத் தூண்டுகின்றது. இதற்கான அவசியத்தையும் வழியுறுத்துகின்றது. அறிவை அடித்தளமாகக் கொண்டு நமக்கான இருப்பியல் கேள்விகளை எழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றது. 
பொதுவாக நாம் ஒவ்வொருவரும் 'அறிவைத் திரட்டுதல்' என்னும் ஒழுகலாறு வகைப்பட்ட ச


ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை
Muthuthtampippillai, A

யாழ்பாணத்திலேயுள்ளவர்க்கு, யாழ்பாணத்தினது பூர்வோத்தர  சரித்திரத்தை அறிவது அவசியமும் ஆனந்தமுமாம் யாழ்பாணத்தை பூகோள படத்திலே நோக்கும்போது அதுகடுகுபிரமாணமாய்த் தோன்றினும் அதன் சரித்திரத்தை நோக்கும் போது பெரிய தேசங்களின் சரித்திரங்களோடு வைத்து நோக்கத்தக்க பெருமையுடையதாகின்றது. யாழ்பாணம் சிறியதாயினும் அதிலிருந்தரசியற்றியசிலவரசர், தமது பாராக்கிரமத்தினாலே இலங்கை முழுதையுங் கட்டியாண்டதோடு, பாண்டிநாடு சேரசோழ நாடுகளையும் ஒவ்வோரமையங்களில் வெற்றிக்கொண்டிருக்கின்றார்;கள். என்றால் அதன் சரித்திர பெருமை கூறவும் வேண்டுமோ. 1505ல் இலங்கைக்கு  வந்த பறங்கிக்காரர்; இலங்கையில் அநேக நாடுகளை சிங்களவரசர்;பாற் கவர்;ந்தப்பின்னரும் நூறுவருஷஞ் சென்றே யாழ்பாணத்தை பிடித்தார்;கள். அவர்;கள் மூன்றுமுறை போர்தொடுத்தும் நிருவகிக்க முடியாது தோற்றோடினார்;கள் என்பர்;. சமாத