புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

ஆய்வு முறையியல்

 
சமகாலத்தில் ஆய்வு முறைமை என்பது தனிப்பெரும் துறையாகப் புலமை உலகில் வளர்ச்சி பெற்று வருகின்றது. ஆய்வியலை தமிழுக்குக் கொண்டுவரும் முயற்சியை பல்வேறு ஆய்வாளர்களும் மேற்கொண்டுவருகின்றனர்.
 
பொதுவாக ஆய்வு என்பது கேள்வியின் அடிப்படையில்தான் தொடங்குகிறது. கேள்விகள்தான் ஆராய்ச்சிகளுக்கு அடிப்படை. பெரும்பான்மையான கேள்விகளுக்கு தகவல்களின் அடிப்படையில் விடைகாண இயலாது. பல கேள்விகளுக்கான விடைகள் சிந்தனைகளாகின்றன. சிந்தனைகள் தனிமனித மேம்பாடு, சமூக மேம்பாடு, சமயச் சீர்திருத்தம் மற்றும் அரசியல், பொருளியல், சமூகவியல், உளவியல், கல்வியியல் போன்ற துறைகளில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் எல்லாச் சிந்தனைகளும் ஆராய்ச்சியாகிவிடாது. சிந்தனைகள் ஆய்வுக்கு அடிப்படை ஆகலாம்.
 
ஆய்வின் முக்கிய நோக்கமே அறிவுப் பரப்பில் ஒரு செயற்கையாக அமையக் கூடிய புதிய பொருளை அறிவதே ஆகும். ஆய்வு என்பது தேடுதலாக அமையும் பொழுது அதன் விளைவு புதிய கண்டுபிடிப்பாகஇருக்க வேண்டும். இத்தகைய கண்டுபிடிப்பு ஏற்கெனவே உள்ள அறிவுப் பரப்பில் புதிய பரிமாணமாக அமைய வேண்டும். இவ்வாறு அமைய ஆய்வாளரின் உண்மையைத் தேடும் இயல்பும் நுண்பார்வையும் மிக அவசியம். ஆகவே ஆய்வு என்பது பு

சோ.சந்திரசேகரன்
Sandrasekaram, S

பேராசிரியர் சோ.சந்திரசேகரன் ஆசிரியராகப் பணியை ஆரம்பித்து பின்னர் விரிவுரையாளராக, கல்வியியல் பேராசிரியராக உயர்ந்து, இன்று கல்விப்பீடப் பீடாதிபதியாகவும் அமர்ந்துள்ளார். இவர் கல்வியியல் துறையில் தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கி மிகச் சிறப்புடன் பணியாற்றி வருபவர். 

இன்று கல்வியியல் சார் கட்டுரைகளையும் நூல்களையும் தீவிரமாகவும் அதிகமாகவும் எழுதிக்கொண்டிருப்பவர். கல்வியியல் துறையில் ஏற்பட்டுவரும் புதிய மாற்றங்களையும் விருத்திகளையும் மற்றும் புதிய பரிமாணங்களையும் தெளிவாகத் தமிழில் எடுத்துக்காட்டி வருகின்றார். 
 
குறிப்பாக இவர் அறிவை மக்கள் மயப்படுத்துதல் என்னும் சனநாயகச் செயற்பாட்டிற்கான "அறிவுப் பரம்பல்" இலக்கிய நடவடிக்கையில் ஓர் முன்னோடியாகவும் உள்ளார். இதற்காக ஊடகங்களை முழுமையாகப்