புவியியல் : சூழலியல் முகாமைத்துவம்
|
இலங்கையின் பாடசாலை முறைமையில் வகுப்பறைப் பாடம் மற்றும் தனியார் போதனை நிலையங்களில் வழங்கப்படும் போதனை தவிர்ந்த ஏனைய சுயகற்றல் முறைகளினூடாகக் கற்பதற்கான தகுதி வாய்ந்த நூல்களின் பற்றாக்குறை க.பொ.த. உயர்தர மாணவர்களைப் பொறுத்த வரையில் ஒரு குறைபாடாகக் கூறப்பட்டு வந்துள்ளது. அரசாங்கத்தின் இலவச பாடநூல் விநியோகமானது உயர்தர வகுப்புக்களைச் சென்றடைவ-தில்லை. இன்றைய கல்வி முறைமையின் புதிய நோக்கங்களுக்கமைய மாணவர்கள் சுயகற்போராக விருத்திபெறல் வேண்டும் என்னும் குறிக்கோள் ஓர் உயர்தரமான கல்வியின் நோக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்மொழி வழி மாணவர்கள் இவ்வாறான நோக்கத்திற்கமைய விருத்தி பெறுவதற்கு அம்மொழி வழியிலான பாடநூல்களும், இணையச் சஞ்சிகைகளும், இணையத்தளங்களும் தேவை. குறிப்பாக, புவியியல் பாடத்தினை அதிலும் குறிப்பாக, புவியியல் பாட ஏற்பாடு சார்ந்த பல விஞ்ஞான ரீதியான புதிய துறைகளில் துணைப்பாட நூல்களின் பற்றாக் குறையானது புவியியல் மாணவர்களால் இன்று நன்கு உணரப்பட்-டுள்ளது. அத்துடன் சிலகாலத்துக்கு முன்னர் பல்கலைக்கழகங்களில் புவியியலைக் கற்ற பட்டதாரி ஆசிரியர்களும் புவியியல் துறையில் விருத்தி பெற்றுவரும் புதிய அறிவுத் தொகுதியை தமிழ் வழியினூடாகப் பெற்றுக்-கொள்ள வேண்டிய ஓர் அவசியமும் உள்ளது. இப்பின்புலத்திலேயே க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு உதவும் வகையில் புவியியல்: சூழலியல் முகாமைத்துவம் என்னும் தலைப்பில் ஒரு புதிய நூலை எழுத முற்பட்டோம்.
கலைத்துறைப் பாடங்களுள் ஒன்றான புவியியலில் விஞ்ஞான ரீதியான அம்சங்கள் அதிகம். முழுமையான விஞ்ஞானமாக
|