சிவசுப்ரமணியம், த ( தம்பு-சிவா) Sivasubramaniam, T
|
இந்தத் தொகுதியைத் தந்துள்ள தம்பு சிவா அவர்கள் இதழியலில் நீண்டகால அனுபவ வீச்சைக் கொண்டவர். சளைத்தலின்றி எழுதிக் கொண்டிருக்கும் ஆற்றல் அவரிடத்து மேலும் விசை பெற்றுள்ளது.
இத்தொகுதியில் இடம்பெற்ற அனைத்துக்கதைகளும் 'வெளிமலர்ச்சி நடப்பியல்' சார்ந்தவையாகவுள்ளன. நாளாந்த வாழ்விலே நடப்பவற்றையும்
கண்டு அனுபவித்தவற்றையும், ஈடுபாட்டுடன்
நுகர்ந்து கொண்டவற்றையும் உணர்ச்சிகளை ஏற்றித்தருதல் கதைகளிலே காணப்படும் இயல்பாகின்றது.
நடப்பியலும் உணர்ச்சியியலும், உள்ளுணர்வும்
வெளிமலர்ச்சி நடப்பியலை நோக்கி நகர்த்துகின்றன.
வாழ்க்கையின் சம்பவத் துணிக்கைகள் ஒவ்வொரு கதையிலும் நிலைமாற்றம் செய்யப்படும் பொழுது நடப்பு நிலவரங்கள்
சிலாகித்து மேலெழுந்து நிற்கின்றன.
கதையின் எடுத்துரைப்பு வழியாக
வாழ்க்கை மற்றும் சமகாலத்தைய சூழல் பற்றிய
|