புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சீர்மிய உளவியல்

பாடசாலைச் சீர்மியம் தொடர்பாக தமிழில் வெளிவரும் முதலாவது நூலாக இது அமைகின்றது. சீர்மியம் ஒரு மேலைத்தேயச் செயல்முறை என்றும் அறிமுறையென்றும் கருதப்படும் அறிகை அடிமைத்தனத்தை மாற்றியமைத்தலும் இந்நூலாக்கத்தின் நோக்கமாகக் கொள்ளப்படுகின்றது. எமது மரபு வழிச் சடங்குகளும், கூத்துக்களும், இலக்கிய வழியான எடுத்துரைப்புக்களும் உளச்சுகம் தேடும் நுண் வழிகளைப் பலநிலைகளிலும் முன்னெடுத்து வந்துள்ளன. சீர்மியத்திலே தோழர் தோழியரது வகிபாகம் சங்க இலக்கியங்களிலே பரவலாகப் பேசப்படுகின்றது. மேலும் சீர்மிய நெறியைப் பக்தி நெறியுடன் இணைக்கும் அறிகை முறைமை நாயன்மார் பாடல்களிலும், ஆழ்வார் பாசுரங்களிலும் காணப்படுகின்றன. எமது சித்தர் மரபுகளில் இடம்பெற்று வந்த உள-நலக்காப்பு நடவடிக்கைகளும், நாட்டார் மரபுகளில் இடம்பெற்று-வரும் உளச்சுகம் காணற் செயற்பாடுகளும் விரிவான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளன. இவ்வாறான கருத்தெழுகைச் சூழமைவில் இந்நூலாக்கம் இடம்பெற்றுள்ளது. 
ஆக்கத்துக்கு வேண்டிய உசாத்துணை நூல்களைத் தந்துதவிய தேசிய கல்வி நிறுவக சமூக விஞ்ஞானத் துறைப் பணிப்பாளர் கலாநிதி உ.நவரத்தினம் மற்றும் கல்வி அமைச்சின் மதியுரையாளர் கலாநிதி கமலநாதன் அவர்களும் தொடர்ந்து எழுதுமாறு உற்சாக தரும் நண்பர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் நண்பர் தெ.மதுசூதனன் அவர்களும் சேமமடு வெளியீட்டு நிறுவனத்தினரும் நன்றிக்குரியவர்கள். 
சபா.ஜெயராசா
கோயில் முன்றல், இணுவில் 

 


செ.சிவலிங்கம்
Sivalingam, S

ஈழநாட்டிலே கந்தப்புராண வசனந் தோன்றியுள்ளது. கந்தப்புராணத்திற்கு பல அறிஞர்கள் உரையெழுதியுள்ளனர். நாமறிந்த வரையிலே கந்தப்புராணத்தைச் சுறுக்கிச் செய்யுலாகச் செய்த ஒரேயொரு தமிழறிஞர் பண்டிதர் சிவலிங்கம் அவர்களேயெனலாம்.
யாப்பறி புலவனான பண்டிதர் சிவலிங்கம் அவர்கள் கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு அருகே வைத்து ஆராயப்பட வேண்டியவர். இறைபக்தியும் புலமை பாரம்பரியமுங் கொண்ட ஒருவராலேதான் இத்தகைய முயற்சியிலீடுப்பட முடியும். இந்த இரண்டும் பண்டிதர் சிவலிங்கத்திற்கு வாய்த்திருக்கின்றன. இவரின் செய்யுள்களை நோக்கும் போது இவர் '  ஆழ்ந்திருக்கும் கவியுளம்' கண்டவராக கணிக்கப்படுகின்றார். 
கந்தப்புராணம் என்னும் கடலை இலகுவாகக் கடக்க உதவும் படகாக இவரின் 'கந்தப்புராணச்சுறுக்கம்'  என்னும் நூல் அமைகின்றது. பண்டிதர் சிவலிங்கம் கவிதை கலை கைவந்தவர்  என்பதற்கு இந்நூல் ச