புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

அபிவிருத்தித் தொடர்பாடல் மாற்று நோக்கி...

பின் காலனியச் சூழல், உலகமயமாதல் ஆகியவற்றின் எழுபுலத்தில் மரபுவழி ஊடகங்கள் பற்றிய விரிவான ஆய்வுகள் வளர்வுறும் நாடுகளிலே மேலெழத் தொடங்கியுள்ளன.  கலாநிதி சி.ரகுராம் அவர்கள் மேற்கொண்ட நிகழ்த்தும் கலைகள் பற்றிய அகன்று ஆழ்ந்த இந்த ஆய்வு அந்த வகையிற் குறிப்பிடத்தக்கது.
தொடர்பாடல் இயல், சமூகவியல், உளவியல், அரசியற் பொருளியல், அரங்கியல் முதலாம் பன்முக அறநெறிகள் (ஆரடவனைளைஉipடiயெசல) சார்ந்த நிலையில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஓர் அணுகுமுறை ஆய்வுத் தளத்தை வலிமைப்படுத்துகின்றது.
தொடர்பாடல் நோக்கில் நாட்டார் ஊடகங்கள்;, நாட்டார் நிகழ்த்து கலைகள் ஆகியவற்றின் மேலெழு கோலங்களையும் (ளுரசகயஉந ளுவசரஉவரசநள) ஆழ்நிலைக் (னுநநி)கோலங்களையும் கண்டறிவதற்குரியவாறு ஆய்வு வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பண்பாடும் தொடர்பாடலும் ஒன்றிணைந்திருத்தலும், அவை சமூக அடிக்கட்டுமானத்தின் மேற்சுழற்சிகளாக இருத்தலும் குறிப்பிடத் தக்கவை. இந்திய மரபுவழித் தொடர்பாடலும், மரபுவழி ஊடகங்களும் நிகழ்த்துகலைகளும் சமூக அடித்தளம் (டீயளந) மற்றும் மேல் அமைப்பு (ளுரிநச ளுவசரஉவரசந) ஆகியவற்றுக்கிடையேயுள்ள தொடர்புகளைத் துல்லியமாகப் புலப்படுத்துகின்றன. விரிவான இந்த ஆய்வின் நீட்சி அதற்குரிய சான்றாகவும் அமைகின்றது.
வேட்டுவ வாழ்க்கை, ஆயர் வாழ்க்கை, நிலமானிய வாழ்க்கை, ஐந்திணை மரபுகள், தொன்மையான வர்த்தக முறைமை, அரசின் உருவாக்கம், கிராமிய வழிபாடுகள், சாதிய அடுக்கமைவு முதலியவற்றின் பண்புநிலை நீட்சியாக மரபுவழி ஊடகங்களும், நிகழ்த்துக்கலைகளும் அமைந்துள்ளன. அவை சமூக வரலாற்


பொ.கனகசபாபதி
Kanakasababathy, P

             திரு.பொ.கனகசபாபதி அவர்கள் கடந்த இருபது வருடங்களாக இலங்கை, இந்திய, கனடியப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதி வருகிறார். அவரது படைப்புக்களிற் சில, அதிபர் ஒருவரின் கூரிய பார்வையில், பெற்றோர்ஃ பிள்ளை உளவியல், மாறன் மணிக்கதைகள் (இருபகுதிகள்), திறவுகோல், மனம் எங்;கே போகிறது என்ற தலைப்புகளில் நூலுருப் பெற்றுள்ளன.
             சென்னைப் பல்கலைக் கழகத்தில் விலங்கியலில் சிறப்புப் பட்டம் பெற்று மகாஜனக் கல்லூரியில் அவர் ஏற்றுக் கொண்ட ஆசிரியப் பணி, சக மனிதர்களை மேம்படுத்தும் அவரது நோக்கத்திற்கு உவப்பாய் அமைந்தது. அதிபராய் அவர் பணிபுரிந்த காலங்களிற் புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியும் பெருவளர்ச்சியுற்றன. புலம் பெயர்ந்து நைஜீரியாவில் ஆசிரியராகவும், கல்வி அதிகாரியாகவும், கனடாவில் ரொறன்ரோ  பாடசாலைச் சபையின் கல்விசா