புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்வி முகாமைத்துவ விடய ஆய்வுகள் நவீன அணுகுமுறைகள்

முகாமைத்துவ விடய ஆய்வு தொடர்பாக 1991ஆம் ஆண்டு வெளியான எனது வெளியீடுகள் பற்றி ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிருவாகிகள் ஆகியோ நன்கறிவர். அதனைத் தொடர்ந்து நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிருவாகிகள் மட்டுமன்றி முகாமைத்துவத்தில் நாட்டமுள்ள அனைவரும் தமது தொழில் திறன்களை வளர்க்கும் பொருட்டும், சுயமான கற்றலை மேற்கொள்ளவும், கல்வி தொடர்பான பரீட்சைகளுக்குத் தம்மை ஆயத்தம் செய்யவும், இன்னும் கூடிய விளக்கங்களுடனும் வழிகாட்டல்களுடனும் இதனை மீண்டும் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டனர். அவர்களது வேண்டுகோளை நிறைவேற்றுமுகமாக இந்நூல் வெளிவருகின்றது. 
பாடசாலை முகாமைத்துவம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் இதில் உள்ளடக்கப்படுகின்றன. விடய ஆய்வுக்கு விடையளிக்கும் பல்வேறு அணுகுமுறைகள், விடய ஆய்வுகள், அவைகள் மீதான வினாக்கள், குறிப்புக்கள் என்பனவற்றை உள்ளடக்கி வெளிவரும்  இந்நூல், அதிபர்கள் சேவைப்பரீட்சை (ளுடுPளு)இ கல்வி நிருவாக சேவைப் பரீட்சை (ளுடுநுயுளு)இ தடைதாண்டுப் பரீட்சைகள் (நுடீ)இ பட்டப்பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா, பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா, புதுமுகத் தேர்வுகள் போன்றவற்றுக்கும் பயன்படுவதுடன், கல்வித் துறையில் பணிபுரிவோர் தம் முகாமைத்துவத் திறன்களை வளர்ப்பதற்கும் பயன்படும்.
தமிழில் கல்வி முகாமைத்துவ இலக்கியங்கள் மிக அரிதாகவே யுள்ளன. தமிழ்மொழி மூலம் கல்விப் போதனை இடம்பெறும் இக்காலத்தில் முகாமைத்துவ இலக்கியங்களுக்குத் தேவை அதிகமாக வுள்ளது. இதனை உளத்திற் கொண்டே பல்வேறு செயற்பாடுகளின் மத்தியிலும் இந்த வெளியீட்டு முய


இரா.இளங்குமரன்
Illankumaran, Era

கடலொன்று கடல்கடக்கும் ஆயத்தங்கள்
கவின்அல்லூர் தனில்நிகழ்வ துண்மை யுண்மை;
மடைதிறந்த வெள்ளமதும் பின்னை ஓடும்
மாமேதை குறட்குமரர் வாய்தி றந்தால்;
கடைவிரித்துக் கொள்ளாமல் கட்டிக் கொண்டோர்
காசினியில் பலர்உருகும் இந்த நாளில்,
படைவென்றே ஊர்திரும்பும் பாங்கு பொங்கப்
பலருமிவர் குறளமுதம் பருகச் செல்வர்!

தளர்மனத்து இளைஞர்களைக் கவர்ந் திழுக்கும்
தலைவர்கள் இத்தரணிதனில் யாருமில்லை!
வளமான குறள்வேத வழிந டப்பின்
வாழ்வுசிறப் படையும் அப்பணிசெய் தற்கே
இளங்குமர அய்யாவே இருக்கின்றீர் நீர்