புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

தமிழரின் தோற்றமும் பரம்பலும்

'உலக முதற்றாய் மொழி தமிழே' என்று வலுவாக நிறுவியவர் மொழிநூல் மூதறிஞர் பாவாணர் அவர்கள் மாந்த நாகரிக வரலாறு தெற்கிலிருந்து தொடங்கியிருக்கின்றது. என்று அவர் கூறுவார். அவர் போற்றிய வரலாற்று அறிஞர்களுள் ஒருவர் வீ. ஆர்.இராமசந்திர தீட்சிதர். தமிழரின் தோற்றம் பரவல், நாகரிகம் பற்றி போலியான ஆதாரங்களைக் காட்டியோ காழ்ப்புணர்வுடனனோ சில வரலாற்றிஞர்கள் வம்படி வழக்காடல்கள் செய்தனா, செய்து வருகின்றனர். 
ஆனால் அன்றைக்கும் இன்றைக்கும் இத்தகைய பொய்யுரைகளைத் தோலுரித்துக் காட்டும் மெய்யான முயற்சிகளும் நடந்துவருகின்றன. அவ்வகையில் அறிஞர் வி. ஆர் இராமச்சந்திரனார் ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றி அது ஆங்கிலத்திலேயே The Origin and Spread of the Tamils  என்று நூலாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. அதை நம் காலத்தில் வாழும் வரலாற்று ஆய்வாளர பாவாணர் வழியிலே ஆய்வு நடைப்போடும் அறிஞர் பி. இராமநாதன் அவர்கள் அருமையாக தமிழாக்கம் செய்துள்ளார் அதுவே உங்கள் கையில் தவழ்ந்துக் கொண்டிருக்கும் இச்சிறு நூல். 
அறிஞர் வி.ஆர் இராமசந்திரனார் 'தமிழர் தென்னிந்தியாவின் தொல்குடிகளே அவர்கள் மெசபத்தோமியாப் பகுதியிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் என்று சில அறிஞர்கள் கூறுவது தவறு  தொல்தமிழரே தென்னிந்தியாவிலிருந்து உலகெங்கும் பரவினர் சிந்துவெளி , எலாம், சுமேரியா, எகிப்து போன்ற பண்டை நாகரிகங்களை எல்லாம் உருவாக்கியவர்கள் இங்கிருந்து அங்கு பரவிய தமிழர்களே!' என்ற உண்மைகளை ஆணித்தரமான சான்றுகளுடன் இச்சிறு நூலில் நிறுவுகிறார். சொற்பொழிவு என்பதால் நூல் நாற்பது பக்கங்களில் சுருக்கியுள்ளார். ஆனாலும்சுற


க.சின்னத்தம்பி
K.Sinnathampi

கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் விரிவுரையாளராக பேராசிரியராக துறைத் தலைவராகப் பலநிலைகளில் பணியாற்றியவர். நீண்டகால கற்பித்தல் அனுபவமும் ஆராய்ச்சி மரபும் கொண்டவர். ஆசிரியர் கல்வியில்       புத்தாக்கமும் பல்பரிமாணமும் சிறக்க உழைத்து வருபவர்.
 
இவர் விஞ்ஞான கணித அறிவுத் தொகுதியின்  விரிவாக்கப் புலங்களை உடனுக்குடன்        உள்வாங்கி கல்வியியலில் புதுமலர்ச்சி ஏற்பட முயற்சிப்பவர். இவரது நூலாக்கப் பணிகள்   கல்வியியல் துறையில் புதுஆய்வு மரபு, ஆக்கமலர்ச்சிப் பண்புகள் புத்தாக்கச்           சிந்தனைகள் ஏற்படக் காரணமாக விளங்குகின்றன. இதற்கு இவரது ஆக்கங்கள் மேலும் வலுச்சேர்க்கின்றன.

சமகால கல்வி வளர்ச்சியில் தரவிருத்தியை உறுதிப்படுத்தும் ஆய்வுக் களங்களை         முன்னிறுத்தி இயங்கி வருபவர்.