புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

தமிழியலும் திறனாய்வுக் கலையும்

தமிழ்ச் சூழலுக்குரிய தனித்துவமான திறனாய்வுக் கோட்பாட்டை உருவாக்கும் அறிகை முயற்சி இந்நூலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
ஐரோப்பியச் சூழலில் பல்வேறு திறனாய்வுக் கோட்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. பன்மைச் சூழலும் அறிவின் புத்தாக்க வடிவங்களும் கலை இலக்கியங்களை அணுகும் முறைகளும் புதிய திறனாய்வு வடிவங்களை உருவாக்கி வருகின்றன.
தமிழ் மரபுக்குரிய திறனாய்வு அணுகுமுறையின் தோற்றத்தினைத் தொல்காப்பியத்திலே காண முடியும். தமிழில் உருவாக்கம் பெற்ற இலக்கண நூல்களிலும், உரை மரபுகளிலும் திறனாய்வுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. 
மேலைப்புலத்திறனாய்வுக் கோட்பாடுகள் கருத்தியலை (ஐனநழடழபல) உட்பொதிந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. கருத்தியலும் திறனாய்வும் வேறு பிரிக்க முடியாதவை என்பதை மீள வலியுறுத்த வேண்டியுள்ளது. 
இந்நூலாக்க முயற்சிக்கு உற்சாகம் தரும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினரும், மாலைக் குழுவினரும், பல்கலைக்கழகத்தினரும் வெளியீட்டாளரும் நன்றிக்குரியவர்கள். 

சபா.ஜெயராசா


எஸ்.ரகுராம்
S.Raguram

சிவசுப்பிரமணியம் ரகுராம் கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் தொடர்பாடல் கற்கையியல் முதுநிலை விரிவுரையாளராகப் பணிபுரிபவர். இவர் தொடர்பியல் கல்வியை தமது சிறப்புத் துறையாகத் தேர்வு செய்து ஆய்வுகளை மேற்கொள்பவர். இத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றவர். தொடர்பாடல் கற்கைகள் சமூகவியல், பண்பாட்டியல், கலைகள், உளவியல், மொழியியல், அரங்கியல், நாட்டார் வழக்காற்றியல், அரசியற் பொருளியல் முதலான பல்துறை அறிவுப் புலங்களுடன் ஊடாட்டம் கொண்டது. இந்த அறிகை மரபின் பன்முக ஆய்வு இணைப்பாக்கப் பின்புலத்தில் உயிர்ப்புடன் இயங்குபவர்.