புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சமகாலக் கல்வி முறைகளின் சில பரிமாணங்கள்

ஆசிரியர்களுக்கான தொழில்முறைக்கல்வி 'கல்வியியல்' எனப் பொதுவாகச் சுட்டப்பட்டாலும் அதில் ஏராளமான துணை நெறிகள் உண்டு. கல்வி உளவியல், கல்விச் சமூகவியல், பொதுக்கற்பித்தலியல், கல்வி மதிப்பீடு, கல்வித்தத்துவம் எனப் பலவாறாக விரிந்து செல்லும் கல்வியியலின் ஒரு பிரதான துணைப்பிரிவு 'ஒப்பியல் கல்வி' ஆகும். உலக நாடுகளின் கல்வி முறைகளின் போக்குகள், வளர்ச்சிகள் என்பன இதில் முறையாக, வரலாற்று ரீதியாக ஆராயப்படுவதும் அவ்வாறான போக்குகளுக்கும் வளர்ச்சிகளுக்குமான காரணங்கள், அவற்றில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் பற்றிய ஆய்வு ரீதியான நோக்கு இக்கற்கை நெறியின் உள்ளடக்கமாகும்.
ஆசிரியர்கள் மட்டுமன்றி இலங்கையின் கல்விமுறை தொடர்பாகக் கொள்கையாக்கம் மற்றும் சீர்திருத்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ள உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அறிஞர்களும் ஒப்பீட்டுக்கல்வியில்; ஆர்வம் கொண்டவர்கள்; இலங்கையின் கல்வி வளர்ச்சி பற்றிய நிதானமான மதிப்பீட்டைச் செய்ய, ஏனைய வளர்முக நாடுகள், குறிப்பாக அயலில் உள்ள தென்னாசிய, தென்கிழக்காசிய மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளின் கல்விமுறை பற்றிய அறிவும் தெளிவும் தேவை. இவ்வாறான பின்புலத்திலேயே இலங்கையின் கல்வி வளர்ச்சி பற்றிய மதிப்பீடுகளைச் செய்வதோடு, எதிர்கால வளர்ச்சிக்கான கொள்கைகள், சீர்திருத்தங்கள் தொடர்பாகக் காத்திரமாக சிந்திக்க முடியும்.
இவ்வகையில், உலக நாடுகளின் கல்வி மற்றும் இலங்கையின் கல்வி வளர்ச்சி தொடர்பான கட்டுரைகளைக் கொண்ட இந்நூல் ஆசிரியர்களுக்கும் கல்வித்துறையின் மேம்பாட்டுக்காக உழைத்து வரும் மற்றோருக்கும் பயன்படும் என ந


தை.தனராஜ்
Thanaraj, T

தையல்முத்து தனராஜ் மாணவ ஆசிரியராகத் தனது கல்விப் பணியினை ஆரம்பித்தவர். தொடர்ந்து ஆசிரியர் கலாசாலை, பல்கலைக்கழகம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பட்டங்கள் பெற்றுத் தனது தகுதியை, ஆளுமையை வளர்த்துக்கொண்டவர். பன்னாட்டு கல்விசார் பயிற்சிகளிலும் கல்வி மாநாடுகளிலும் பங்குபற்றியவர். 

இன்று கல்வியியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராகவும், வளவாளராகவும், ஆய்வாளராகவும் பரிணமித்து வருபவர். கற்றல், தேடல், ஆய்வு என்பதை தனது பண்புசார் கோலங்களாக வெளிப்படுதுபவர். தமிழ்மொழி மூலமான கல்விச்சூழல், புலமைத்துவம் தொடர்பான அகல்விரி சிந்தனைகளையும், விமரிசனங்களையும் மற்றும் நடைமுறைகளையும் தன்னகத்தே கொண்டு இயங்குபவர்.