புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

இளைஞர் இலக்கியம்: உலகை மாற்றிய நவீன சிந்தனையாளர்கள்

இளைஞர் இலக்கியம், இளம் வளர்ந்தோருக்கான இலக்கியம், விடலைப் பருவத்தினருக்குரிய இலக்கியம், கட்டிளைஞர்களுக்குரிய இலக்கியம் என்ற சொல்லாடல்கள் ஏறத்தாள ஒரு பொருள் குறித்து நிற்கின்றன.
இப்பிரிவினருக்குரிய எழுத்தாக்கங்கள் சமூக நிலையிலும், கல்வி நிலையிலும் பொழுதுபோக்கு நிலையிலும் முக்கியமானவை. ஊறுபடாத சிந்தனைகளை அவர்களிடத்து வளர்ப்பதன் வாயிலாக வளமான சமூகத்தை உருவாக்க முடியும்.
அவர்களைத் தவறான பாதையில் இட்டுச் செல்லும் சமகாலச் சூழலில் ஆக்கநிலை வழிகாட்டல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்நிலையில் நேர்ப்பண்பு மிக்க எழுத்தாக்கங்களையும், கலையாக்கங்களையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.
தமிழில் இத்துறையில் போதுமான ஆக்கங்கள் இடம்பெறவில்லை. இத்துறையின் முக்கியத்துவம் இன்னமும் உற்றுணர்வு  கொள்ளப்பட வில்லை. அறிவும், ஆற்றலும், நேர்ச் சிந்தனையும், ஆக்கமலர்ச்சியும் கொண்ட இளைஞர் சமூகத்தின் ஆக்கத்துக்குரிய நூல்களும், கலைப்படைப்புக்களும் உடனடித் தேவைகளாகின்றன. தமிழில் உரிய காலத்தின் தேவைகளை உணர்ந்து இந்நூல் ஆக்கம் பெற்றுள்ளது.
சபா.ஜெயராசா

 


க.சி.குலரத்தினம்
Kularatnam, C.S

ஈழத்துத் தமிழ்ப் புலமை மரபில் பல்துறை ஈடுபாட்டாளராக விளங்கியவர் க.சி.குலரத்தினம் ( 1916 - 1993 ). இவர் மரபு நவீனம் வழிவந்த மருகளை உள்வாங்கியவர். சைவாசிரியர் கலாசாலை மரபிலும் திளைத்தவர். தொடர்ந்து கால்நூற்றாண்டுக்கு மேலாக ஆசிரியப்பணி புரிந்தவர். கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் மட்டுமல்ல தொடர் ஆய்வு முயற்சிகளிலும் தீவரமாகச் ஈடுபட்டவர். செந்தமிழ் வளர்த்த செம்மல்கள், சைவம் வளர்த்த சான்றோர்கள், தமிழ் தந்த தாத்தாக்கள் போன்ற மூலம் ஈழத்துத் தமிழ் மரபின் தளமும் வளமும் பற்றிய தேடுகைக்கான ஊற்றுக்களையும் ஓட்டங்களையும் மீளுருவாக்கம் செய்தவர். நோத் முதல் கோபல்லா வரை என்னும் தூல் மூலம் வரலாற்று அரசியல் இணைப்புக்களை ஆய்வு ரீதியில் விளக்க முற்பட்டவர். அதன்மூலம் தமிழுணர்வு முகிழ்ப்பின் தோற்றப்பாடுகளையும் அடையாளம் காட்டியவர். இந்து நாகரீகம் தந்து இந்து ம