புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

தொன்மைச் செம்மொழி தமிழ்

கால்டுவெல் 1856இல் தமது 'தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணத்தை' வெளியிட்டதுமே உலக மொழியியலறிஞர்கள் தமிழின் தொன்மை, முன்மை, செம்மை முதலியவற்றையும், ஞால முதன் மொழிக்குத் தமிழ் மிக நெருங்கியதாக நிறுவப்பட வாய்ப்பு இருப்பதையும் உணர்ந்தனர். எனினும் 'செம்மொழி' என ஒரு மொழியை ஏற்றிடத் தொன்மைமொழியாயினும் அம்மொழி இலக்கியம் சிறந்ததாகவும், தனித்தன்மை வர்ந்ததாகவும், பிறமொழி இலக்கியங்களை அடியொற்றி உருவாகாததுமாகவும் இருக்க வேண்டும். 1850 க்குப் பின்னர்தான் தொல்காப்பியம் முதலான சங்க இலக்கிங்கள் அச்சிட்டு வெளியிடப்பட்டன. 1900 அளவிலேயே மொழி அடிப்படையிலும் சரி. இலக்கிய அடிப்படையிலும் சரி, தமிழ் செம்மொழியே என்பதை உலக அறிஞருலகம் ஏற்றுக் கொண்டது. இந்திய நடுவண் அரசு அளவில், தமிழ் மொழி செம்மொழி என மிகக் காலம் தாழ்ந்து 2004இல் தான் ஏற்கப்பட்டது. இதற்கு பலரும் காரணமாவர் - தமிழர்களாகிய நாம் உட்பட, செம்மொழி கோரிக்கை வரலாற்றை இந்நூல் இயல் இரண்டில் காண்க.
காலப் பழமையால் வைரம் பாய்ந்து!
நாகரிகத்தின் நாற்றங் காலது
எம்மொழிக்கும் அது ஈடிணையற்ற
செம்மொழி! உலகச் சிந்தனைக்கெல்லாம்
ஊற்றாய்த் துலங்கும் உண்மையின் பைஞ்சுனை!

 


ரீ.விக்னேஸ்வரன்
Vigneswaran, T

திருநாவுக்கரசு விக்னேஸ்வரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையின் முன்னாள்  விரிவுரையாளரும், தற்போதைய வருகை விரிவுரையாளரும் ஆவார்.  இவர் நெடுங்காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் றோட்டறிக்; கழகத்தின் அங்கத்தவராக இருந்து பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபடுபவர். 

 
அரசறிவியல் பாடங்களை இற்றைப்படுத்திக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தொடர்ந்து தேடலும், வாசிப்பும் கொண்டு தனது ஆளுமையை செழுமைப்படுத்துபவர். அரசறிவியல் மாணவர்களுடனும், ஆர்வமுள்ள வாசகர்களுடனும் பல புதிய செய்திகளை, புதிய கோணத்தில் பகிர்ந்துகொள்ள துடிப்பவர். அரசியல் சார்ந்த ஆக்கங்களை படைக்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர்.