புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

ஏ.இக்பால் கவிதைகள் 100

'எழுத்தாளனே
நீ யார் பக்கம்?
எழுத்தாளனே 
நீ உழைக்கும் 
மக்கள் பக்கமா?
அல்லது
உழைக்கும் மக்களின் 
உழைப்பை
சுரண்டுகின்றவன் 
பக்கமா?'
முற்போக்கு இலக்கிய முன்னோடி மார்க்ஸிம்  கார்க்கி எழுத்தாளர்களைப் பார்த்துக் கேட்கின்றான். 
அகிலத்திலுள்ள முற்போக்கு எழுத்தாளர்கள் அனைவரும் உழைக்கும் மக்கள் பக்கம்தான்  உறுதியாக நிற்கின்றனர். அன்று தொட்டு இன்றுவரை முற்போக்கு எழுத்தாளர் அனைவரும் உழைக்கும் மக்கள் பக்கம் நிற்பதோடல்லாமல் அந்த மக்களின் போராட்டங்களில் ஏதோ ஒரு வகையில் பங்குபற்றி வருவதுடன் அவர்களுக்காக எழுதி வருகின்றார்கள். எங்கள் முற்போக்குக் கவிஞர் இக்பால் அவர்களும் இந்த உழைக்கும் மக்கள் எழுத்தாளர் அணியில் அன்றுதொட்டு இன்றுவரை உறுதியாக நின்று மக்கள் இலக்கியம் படைத்து வருகின்றார். 
முற்போக்கு இலக்கியம் என்றால் என்ன?
முற்போக்கு இலக்கியம் ஒரு வாழ்க்கை நோக்கு. மக்கள் மேம்பாட்டுக்கான ஒரு சக்தி மிக்ககோட்பாடு. முற்போக்கு இலக்கியக் குரல், மனிதநேயக் குரல், மக்களின் போராட்டக்குரல் அதிகார வர்க்கத்தின் அடக்கு முறையையும் ஒடுக்கு முறையையும், சுரண்டலும் சூறையாடலும் எங்குள்ளதோ அங்கு இந்தக் குரல் ஓங்காரமாய் ஒலித்துக் கொண்டேயிருக்கும். 
முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி மார்க்ஸிம் கார்க்கி மக்களைப் பற்றி, அவர்களது போராட்டங்கள் பற்றி வலுவான, புரட்சிகரமான, சத்திய வேட்கையுடைய சிருஷ்டிகளைப் படைத்துள்ளார். முற்போக்கு எழுத்தாளர்களாகிய நாமும் கார்க்கியின் அடிச்சுவட்டில் சென்று கொண்டிருக்கின்றோம். இலக்கியத்தை மக்க


கவிஞர் துரையர்
Thuraisingam, S

கவிஞர் துரையர் என இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்ட கலாபூஷணம் சு.துரைசிங்கம் அவர்களைக் கடந்த முப்பத்தைந்து வருடங்களாக அறிவேன். ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக பின்னர் அதிபராக உயர்ந்து வந்தவர் அவர். அவரது பதினாறாவது வயதில், சுன்னாகம் ஸ்கந்த வரோதயக் கல்லூரி மாணவராக இருந்தபோது அவரது முதலாவது கவிதை வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து பல ஊடகங்களில் எழுதிக் கொண்டிருந்த இவர் 1972இல் தனது தெருவிளக்கு என்ற கவிதை நூலினை வெளிக்கொணர்ந்தார். சிறுவர் பாடல் தொகுதிகள் மூன்று சமயம் சார்ந்த நூல்கள்   மூன்று, புவியியல் சார்ந்த நூல்கள் இரண்டு ஆகியவை  இதுவரை வெளிவந்துள்ளன. கவிக்குரல்கள் என்ற  ஒலிப்பதிவு நாடாவும் இந்து தர்மத்தில் பத்துக்கள் என்ற தொலைக்காட்சித் தொடரும் கூட இவரால் தயாரிக்கப்பட்டவை. இந்து தர்மத்தில் பத்துக்கள் மாணவர்களுக்கு மிகப் பயனுள்ள த