புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

தமிழியல்சார் சிந்தனைத் துளிகள்

நமது மொழியை  நாமே அறிந்துகொள்ள...
பேராசிரியர் சு.சுசீந்திரராஜாவின் தமிழியல்சார் சிந்தனைத் துளிகள்
தொகுதி ஐ க்கான பாயிரக்குறிப்பு.
புலமைநிறை தோழமையுணர்வுடன்.

அமெரிக்க, ஐக்கிய அரசிலும், இங்கிலாந்திலும் ஆங்கிலமே பொது மொழியாகவிருப்பினும், அது இவ்விரண்டு இடங்களிலும் பேசப்பெறும், எழுதப்பெறும் முறைமை காரணமாக நாம் ஒரே மொழியால் பிரிக் கப்பட்டுள்ளவர்கள் (றுந யசந னiஎனைநன டில வாந ளயஅந டுயபெரயபந) என்று மிக ஆழமான மனத்திருப்தியுடன் கூறப்படுவது வழக்கம்.
பேராசிரியர் சுசீந்திரராஜாவின் இக்கட்டுரைத் தொகுதியை வாசிக்கும் பொழுது அத்தகைய ஓர் சிந்தனை நமது மனங்களிலே வந்து போவதை மறுதலிக்க முடியாதுள்ளது. தமிழகத்துப் பேச்சுத் தமிழுக்கும் நமது பேச்சுத் தமிழுக்குமிடையே வேறுபாடுகள் உள்ளன. தமிழகத்தை யும் நம்மையும் (ஈழத்தையும்) பொறுத்தவரையில் மேலதிக விசேடப் பண்பு ஒன்று உள்ளது. அதாவது, ஏறத்தாழ இரண்டாயிரம் வருடப்  பழைமையும் தொடர்ச்சியுமுள்ள தமிழ்மொழியின் புராதன சொல் வழக்குகளும் வடிவங்களும் இலங்கையிலேயே பெரிதும் பேணப்படு கின்றன என்பதாகும். 
மொழியியலை இலக்கணத்திலிருந்து வேறுபடுத்தி நோக்குவதிலே இன்னுந்தான் ஆசிரிய மட்டங்களிலே கூட புலமைத் தெளிவு காணப் படவில்லையென்று கூறப்படுமின்றைய வேளையில் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கின் இயல்புகளையும் அப்பேச்சு வழக்கில் இடம்பெறும் சொற் பயன்பாடுகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறும் இக்கட்டுரைத் தொகுதி நமது அத்தியாவசிய வாசிப்புக்குரியதாகிறது.
ஒட்டுமொத்தமான தமிழ்ச் செழுமைக்கு ஈழத்தவர்களின் பங்க ள


சரவணமுத்துப் பிள்ளை
Saravanamuthu Pillai

மிக்க அரிதிற் கிடைப்பனவாகிய, அச்சுப்பதிவுப் பெற்ற தமிழ் நூல்களையும் இன்னும் அச்சில் வராத தமிழறிஞர் சிலரது ஆக்கங்களையும் அச்சுப்பதிவு செய்து அவற்றைத் தமிழ் பயிலும் மாணவரிடையே பரப்பும் பெரும் முயற்சியினை மேற்கொண்டுள்ள தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திருமிகு. கோ.இளவழகனார் அவர்களுக்குத் தமிழ்க் கூறும் நல்லுலகம் கடமைப்பட்டுள்ளது. 
திரு.ந.சி.கந்தையாப்பிள்ளையின் எழுத்தாக்கங்களை முதலிலே வெளிக்கொணர்ந்து, அவற்றைத் தொடர்ந்து வித்துவான் தி.வே.கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதி எனும் பதினேழு நூல்களைக் கொண்டப் பெருந்தொகுதியினை வெளியிட்டுள்ள நண்பர் இளவழகனார் இப்பொழுது யாழ்ப்பாணத்து அகராதியெனவும், மானிப்பாய் அகராதியெனவும் அழைக்கப்பெறும் கையகராதியினை வெளியிடுகின்றார்.
இவ்வெளியீடு பற்றி  இவ்வெளியீட்டின் ஈழத்து முகவர் திரு.பத்மசீலன் என்னிடத்துக் க