புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

உலகக் கல்வி வரலாறு

உலகக் கல்வி வரலாறு  தொடர்பாக தமிழில் வெளிவரும் முதலாவது ஆக்கமாக இந்நூல் அமைகின்றது. 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த ஆய்வரங்கில் இவ்வாறான ஒரு நூலின் தேவை கலந்துரையாடலின்போது வெளிவந்தது. குறித்த அமர்வு ஒன்றினுக்குத் தலைமை தாங்கிய வேளை என்னிடம் இக்கருத்து முன்வைக்கப்பட்டது.
உலகக் கல்வி வரலாற்றை ஒரு நூலில் எழுதி முடித்தல் மிகவும் கடினமான பணி. பிரபஞ்சத்தை ஒரு சிமிழுக்குள் அடைப்பதற்கு ஒப்பானது. உலகக்கல்வி வரலாற்றில் தொடர்ச்சியாக நிகழ்ந்த முக்கியமான பதிவுகளே இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 
கல்வி வரலாற்றைத் தொகுத்து நோக்கும் பொழுது, சமூகத்தின் பொருண்மியத் தளத்தினால் கல்விச் செயல்முறை உருவாக்கம் பெறும் இணைப்பைக் கண்டுகொள்ளக் கூடியதாகவுள்ளது. அதாவது சமூகத்தின் பொருண்மியத் தளத்தில் நிகழும் மாற்றங்கள் கல்வியாக் கத்தின் மீது நேரடியான செல்வாக்குகளை ஏற்படுத்துகின்றன. 
அறிவுசார்ந்த வெளியீடுகளுக்கு உற்சாகமளித்துவரும் சேமமடு பதிப்பகத்தினரும் நண்பர்களும் நன்றிக்குரியவர்கள். 
சபா.ஜெயராசா

தமிழில் 'உலகின் கல்வி வரலாறு' தொடர்பான எந்தவொரு நூலாக்கமும் இதுவரை வெளிவரவில்லை. இதுவே இத்துறையில் வெளிவரும் முதல் நூலாகவும் முன்னோடி நூலாகவும்  அமை கின்றது. உலகக் கல்வி வரலாறு பல்வேறு தொகுதிகளில் எழுதப்படவேண்டிய பெரு நிலைப்பரப்பாகும். இந்நூல் அந்தப் பெரும் பரப்பைச் சுருக்கிச் சிமிழ் நிலைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இப்பணி மிகவும் சிக்கலானது. இத்தகைய பணியை நூலாசிரியர் துணிந்து மேற்கொண்டுள்ளமை பாராட்


செ.சிவலிங்கம்
Sivalingam, S

ஈழநாட்டிலே கந்தப்புராண வசனந் தோன்றியுள்ளது. கந்தப்புராணத்திற்கு பல அறிஞர்கள் உரையெழுதியுள்ளனர். நாமறிந்த வரையிலே கந்தப்புராணத்தைச் சுறுக்கிச் செய்யுலாகச் செய்த ஒரேயொரு தமிழறிஞர் பண்டிதர் சிவலிங்கம் அவர்களேயெனலாம்.
யாப்பறி புலவனான பண்டிதர் சிவலிங்கம் அவர்கள் கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு அருகே வைத்து ஆராயப்பட வேண்டியவர். இறைபக்தியும் புலமை பாரம்பரியமுங் கொண்ட ஒருவராலேதான் இத்தகைய முயற்சியிலீடுப்பட முடியும். இந்த இரண்டும் பண்டிதர் சிவலிங்கத்திற்கு வாய்த்திருக்கின்றன. இவரின் செய்யுள்களை நோக்கும் போது இவர் '  ஆழ்ந்திருக்கும் கவியுளம்' கண்டவராக கணிக்கப்படுகின்றார். 
கந்தப்புராணம் என்னும் கடலை இலகுவாகக் கடக்க உதவும் படகாக இவரின் 'கந்தப்புராணச்சுறுக்கம்'  என்னும் நூல் அமைகின்றது. பண்டிதர் சிவலிங்கம் கவிதை கலை கைவந்தவர்  என்பதற்கு இந்நூல் ச