புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சர்வதேச அரசியல் சில பார்வைகள்

அரஃபாத் - விடுதலை – ஆயுதப்போர் – உடன்படிக்கை
அரபாத் - விடுதலை – ஆயுதப்போர் பலஸ்தீன உடன்படிக்கை என்ற இந்நூல் நீண்ட வகுப்பறை உரையாடலின் பின்பு வெளிவருகிறது. கடந்த ஐந்து வருடங்களாக அரசறிவியலின் பாடப்பரப்பில் ஓர் அலகாக 'பலஸ்தீனம் - இஸ்ரேல்' என்ற பகுதி கற்பிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு அரசியலையும், பிராந்திய, சர்வதேச பரிமாணத்தையும் இப்பகுதியில் கற்பிக்கும்போது மாணவர்கள் மத்தியில் எழுந்த சந்தேகங்களை தீர்க்கும் முகமாக உருவானதே இந்நூலாகும். இதனை எனது மாணவர்களுடன் சேர்ந்து எழுதுவதில் பெருமையடைகிறேன். எனது கற்றலுக்கு மாணவர்களே ஊக்கிகளாக விளங்குகின்றனர். அவர்களது ஆவலும், தேவையும் எனக்குரிய தேடலை தருகின்றது. இந்நூலில் இரண்டு மாணவர்கள் நேரடியாக தமது கட்டுரைகளை தந்து உதவியுள்ளனர் ஏனைய மாணவர்கள் வகுப்பறையில் கலந்துரையாடல் மூலமும், கருத்துரைகள் மூலமும் உதவியுள்ளனர்.
இந்நூலில் மொத்தமாக ஆறு கட்டுரைகள் அடங்கியுள்ளது. அனைத்தும் பலஸ்தீனம் பற்றியதாகும். பலஸ்தீனத்தின் அரசியல் வரலாறு தனித்துவமானது. புpராந்திய அரசியலிலும், சர்வதேச அரசியலின் பங்களிப்பிலும் ஏதோ ஒருவகையில் வேறுபாடான அடையாளத்தினை தருகிறது. அவ்வகை தனித்தன்மை கொண்ட பலஸ்தீனம் சந்தித்துவரும் ஒவ்வொரு மாற்றங்களையும் அறிவியல் ரீதியில் அளவிடுவது அவசியமானது. அதன் ஆயுதப்போராட்ட வரலாற்றின் படிமங்கள் ஏற்படுத்தியிருந்த தேசியத்தன்மை பிற தேசிய இனங்களுக்கு அவசியமானது. அவ்வாறே அதன் ஆரம்பமும் முடிவும் பிறதேசிய அரசுகளுக்கு தெளிவான திசையை காட்டக் கூடியது. மேலும் சமாதான உரையாடல்கள் அதில் ஏற்பட்டுவ


ரீ.விக்னேஸ்வரன்
Vigneswaran, T

திருநாவுக்கரசு விக்னேஸ்வரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையின் முன்னாள்  விரிவுரையாளரும், தற்போதைய வருகை விரிவுரையாளரும் ஆவார்.  இவர் நெடுங்காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் றோட்டறிக்; கழகத்தின் அங்கத்தவராக இருந்து பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபடுபவர். 

 
அரசறிவியல் பாடங்களை இற்றைப்படுத்திக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தொடர்ந்து தேடலும், வாசிப்பும் கொண்டு தனது ஆளுமையை செழுமைப்படுத்துபவர். அரசறிவியல் மாணவர்களுடனும், ஆர்வமுள்ள வாசகர்களுடனும் பல புதிய செய்திகளை, புதிய கோணத்தில் பகிர்ந்துகொள்ள துடிப்பவர். அரசியல் சார்ந்த ஆக்கங்களை படைக்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர்.