புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

பேராசிரியர் நந்தியும் மலையகமும்

பேராசிரியர் நந்தி வாழ்ந்த காலத்திலேயே அவர் மலையக இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய சேவையை ஆராய்ந்து ஒரு நூல் வெளியிட வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் முகிழ்ந்திருந்தது. 
ஒருநாள் வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்தில் ஓர் இலக்கியக் கூட்டம் முடிந்து திரும்பும் வேளையில் நந்தி அவர்களுடன் கொட்டாஞ்சேனை வரைக்கும் பஸ்ஸில் பிரயாணம் செய்யும் அரியவாய்ப்புக் கிடைத்து மனம் மகிழ்ந்தோம்.  நாம் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு 'நாவல் நகரில் நந்தி சந்திப்புகள்' நூலாக்கம் பற்றிக் குறிப்பிட்டு அபிப்பிராயம் கேட்டோம். 
அவர் சற்று நேரம் மௌனித்துவிட்டுச் 'சரி' உங்கள் விருப்பம்... சந்திப்புகள் நல்ல தலைப்பு என்று கூறினார். நாம் மிகுந்த ஆர்வத்தோடு அவரது வார்த்தைகளை உள்ளூர ஒரு அங்கீகாரமாகவே ஏற்று நூல் வெளியிடத் திட்டமிடத் தொடங்கினோம்! 
நந்தி மறைந்த பிறகு எமது எண்ணம் வலுவடைந்தது. மலையகத்தில் நந்தியுடன் மிக நெருக்கமாகப் பழகிய நண்பர்களுக்குக் கடிதம் எழுதினோம்.  நண்பர் சாரல்நாடன் பாராட்டுக் கடிதத்துடன் கட்டுரை அனுப்பி எம்மை உற்சாகப்படுத்தினார்.  அதைத் தொடர்ந்து கட்டுரைகள் அஞ்சலிலும் நேரடியாகவும் வந்து சேரத்தொடங்கின. 
மலையகம் ஒரு பின்தங்கிய பிரதேசம் இது பல தசாப்தங்களாகச் சொல்லப்பட்டு வரும் ஒரு கருத்து.  ஆனால், இதனை மிகத் துல்லியமாக ஆராய்ந்து பார்த்தால், மலையகம் காலம் காலமாக, பல்வேறு துறைகளின் ஊடாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்து வந்துள்ளதை மிகத்தெளிவாக அவதானிக்க முடியும்.
குறிப்பாகக் கல்வி, கலை, இலக்கிய, மருத்துவ மற்றும் பொதுத் துறைகளில் மலையக


தி.கமலநாதன்
Kamalanathan, T

திருநாவுக்கரசு கமலநாதன் ஆசிரியர் சேவையில் இணைந்து ஆசிரிய கல்வியாளர் சேவையில் முகிழ்த்தவர். விரிவுரையாளர், உபபீடாதிபதி,  பீடாதிபதி எனப் பன்முக ஆளுமைகளை வெளிப்படுத்தி உயர்ந்தவர். கல்வியியல் கற்கையில் 'முனைவர்' பட்டம்  பெற்றவர். தனது சொல் செயலால் தன்னைத் தனியாக அடையாளம் காட்டியவர்.         கல்விச் சூழலில் காலத்தை வென்ற கமலமாகப் பூத்தவர். 

இவர் பெற்ற அனுபவமும் அறிவும் வளமானது.  இதுவே இவரை கல்வி அமைச்சில்  கல்விசார் தரவிருத்திக்கு மதியுரைஞராகவும் இருத்தியுள்ளது. தொடர்ந்து கல்வியியல்சார் சிந்தனைகளை ஆக்கமாகவும் வெளிப்படுத்திக்         கொண்டிருப்பவர். சமூக சமயப் பணிகளிலும் தமிழ்ப்பணிகளிலும் ஈடுபாடு கொண்டு 'வாழ்வின் அர்த்தம்' முழுமையடைய       இயங்கிக் கொண்டிருப்பவர்.