புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

ஆசிரியரை வினைத்திறன் மிக்கவராக்கல்

ஆசிரியர்கள் பாடசாலைக் கல்வி முறையின் மைய விசையாக கருதப்படுகிறார்கள். பாடசாலை கல்வியை விளைதிறன் மிக்கதாக்க வேண்டிய தேவை உலகரீதியாக வற்புறுத்தப்படுகின்றது. கல்வியில்அதிகளவு அரச நிதியை முதலீடு செய்துவரும் இலங்கை போன்ற நாடுகள் பாடசாலைக் கல்வி தோல்வியடையாது தடுப்பது தொடர்பாக தொடர்ந்து முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன. இந்த தேவையப்படையில் ஆசிரியர்கள் பற்றிய கவனக்குவிப்பு அதிகரித்து வருவது நியாயமானதாகிவிட்டது. 
ஆசிரியர்கள் தம்மளவிலும் பாடசாலை மட்டத்திலும் வினைத்திறனுடன் செயற்பட வேண்டியது மிக அவசியமாகும். இவை தொடர்பான அம்சங்கள் இந்நூலி ஆராயப்பட்டுள்ளன. அதேபோல் சமூக மட்டத்திலும் பல்வகைப்பட்ட மாதிரிகளில் தொழிற்பட வேண்டியுள்ளது. இதனால் பாடசாலை ஆசிரியர்களை விளைதிறன் மிக்கவராக முன்னேற்றுவதற்கான வழிமுறைகள் பற்றியும், வழிகாட்டல்கள் பற்றியும் இந்நூல் விரிவாக ஆராய்கின்றது.
ஆழமாக இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொரு ஆசிரியரதும் சிந்தனை, நடத்தை என்பவற்றில் நிச்சயமாக மாறுதல்கள் ஏற்படும் என நம்புகிறேன் எனது வாசிப்புப்பலமும், அனுபவங்களும் ஆசிரியர் மீதான கூர்மையான எனது அவதானமும் இந்த நூலை விரிவாக எழுதுவதற்கு எனக்கு உதவின.
இந்த நூலை எழுதுங் காலத்தில் எனக்கு பல்வேறு வழிகளிலும் உதவிய எனது அன்பு மனைவி சசிலேகாவுக்கும் எனது பிள்ளைகளான சிராணி, சாளினி ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்.
நெருக்கடியான காலகட்டத்தில் தமிழர் உயர்கல்வி நிறுவனமான யாழ்ப்பாணப் பல்களைக் கழகத்தை திறமையாக நிர்வகித்து வரும் துணைவேந்தர் பேராசிரியர் நாகலிங்கம் சண்மு


க.குணராசா ( செங்கை ஆழியான் )
Kunarasa, K

கந்தையா குணராசா ஈழத்துத் தமிழ் இலக்கியச் சூழலில் செங்கை ஆழியான் ஆக அடையாளம் காட்டுபவர். இவர் சிறுகதை, நாவல், ஆய்வு, தொகுப்பு எனப் பன்முக்க் களங்களில் இயங்குபவர். இவரது படைப்பாளுமையால் மிக வெற்றிகரமான எழுத்தாளர் எனும் அந்தஸ்துக்கு உரித்தானவர். 1960களின் நடுப்பகுதியில் இருந்து இன்றைய காலம்வரை செங்கை ஆழியான் பெயரைத் தவிர்த்து ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்படமுடியாது.

இவர் தொகுத்த மறுமலர்ச்சிக் கதைகள், ஈழகேசரிக்கதைகள், முன்னோடிச் சிறுகதைகள் போன்றவை ஈழத்துச் சிறுகதை வரலாற்றை மீள் வாசிப்புக்கு உள்ளாக்கும் விமரிசனப் பண்புகள் கொண்டவை. இத்தொகுப்பு முயற்சியில் இவர் ஈடுபட்டதன் மூலம் இலக்கிய வரலாறு எழுதியலுக்குப் புதுவளம் சேர்க்கின்றார். இதன் பிறிதொரு அடையாளமாகவே ஈழத்துத் தமிழ் சிறுக