புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்வியும் உளவியலும்

ஈழத்துக் கல்வியியல் செயற்பாடுகள் தொடர்பில் சிந்திக்கின்ற ஒரு மனிதன் பேராசிரியர் கலாநிதி.ச.முத்துலிங்கம் அவர்களின் 'கல்வியும் உளவியலும்' எனும் நூலை விடுத்து கற்பானாயின் அவனால் கல்வியியல், உளவியல் தொடர்பில் முழுமையான அறிகையினைப் பெற முடியாதென்பதே உண்மையாகும்.
1980களில் தமிழில் கல்வியியல், உளவியல் தொடர்பான நூல்கள் மிகமிக அரிது. என்னாசான் பேராசிரியர் கலாநிதி. ச.முத்துலிங்கம் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்பித்த  காலத்தில் நானும் ஒரு மாணவனாகக் கற்றதையும் அவர் எனக்கு கற்பித்ததையும் பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் அவரோடு இணைந்து விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில் கல்வி உளவியல் துறை சார்பாக என்னை வழிகாட்டியமையையும் நினைத்துப் பார்க்கின்றேன். 
கல்வியியலின் எத்துறையாக இருந்தாலும் மிக ஆழமாக, தெளிவாகக் கற்பிக்கும் திறனும் ஆளுமையும் மிக்க முறையில் விரிவுரைகளை ஆற்றுவதையும் காணலாம். அந்த அனுபவங்கள் மற்றும் ஆளுமை யாவும் ஒருமித்த வருகையே 'கல்வியும் உளவியலும்' ஆகும். அதனை 25 அத்தியாயங்களாக வகுத்து, பகுதி ஐஇஐஐ என அவர் காலத்தில் இரு நூல்களாக வெளியிடப்பட்டது. இவற்றை அதன் உட்பொருள் நோக்கி அறிமுகம், வளர்ச்சி,  உளவளர்ச்சி, உளநலம், வழிகாட்டல், உளத்தொழிற்பாடு, கற்றல் கொள்கை, மனிதகற்றல், கற்பித்தல் ஆகிய ஒன்பது அறிகைக்குள் உள்ளடக்கி நோக்கலாம். 
இன்றைய ஆசிரியர்கள், பயிற்சிக்காயினும் சரி, பயிலுதலுக் காயினும் சரி பேராசிரியர் கலாநிதி. ச.முத்துலிங்கம் அவர்களின் 'கல்வியும் உளவியலும்' எனும்


அருளானந்தம் சிறீகாந்தலட்சுமி
Arulanandam Sri Kanthaluxmy

அருளானந்தம் சிறீகாந்தலட்சுமி கல்விசார் நூலகராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். தொடர்ந்து நூலகவியல் பண்பாட்டைச் சமூக மட்டத்தில் விருத்தி செய்யத் தனது அறிவு, ஆய்வு சார்ந்த புலங்களை குவியப்படுத்திச் செயற்படுபவர். இவர் கல்விசார் நூலகர் என்னும் பதவியை வெறுமனே அலங்கரிக்கவில்லை. கல்வியின் விரிவாக்கம், அறிவுப் பிரவாகம், நூலக தகவல் அறிவியல் போன்றவற்றை தமிழ்ச் சிந்தனையுடன் தமிழர் வாழ்புலத்துடன் இணைக்கும் முயற்சியில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருபவர். வாசிப்புப் பண்பாட்டின் பன்முகப்பாட்டை வலியுறுத்தும் சமூக செயற்றிட்டங்களை மக்கள் மயப்படுத்துவதில் தீவிரமான ஈடுபாடு கொண்டவர்.