புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

ஜோதியும் சுடரும்

நல்ல எழுத்தாளனுடைய எண்ணக்கருக்களைச் சுமந்து சென்று வாசகனுடைய சிந்தனையிலே தாக்கத்தை ஏற்படுத்தவல்ல ஆற்றல் அவரால் எடுத்தாளப்படுகின்ற சொற்களுக்குள்ளன் அவனுடைய ஏவலுக்குக் காத்திருப்பனபோன்று அவன் எழுதத்-தொடங்கும்போது பேனாவழியாக காகிதத்தில் சொற்கள் தவழ்-கின்றன் குறுநடை போடுகின்றன் நடமாடுகின்றன் நல்ல வேகமாக ஓடவுஞ் செய்கின்றன. 
காலத்துக்கேற்ப, சொல்லவரும் கருத்துக்கேற்பச் சொற்கள் கீழ்ப்படிந்து செயலாற்றுகின்றன. அவன் சொல்லவந்த கருத்து, ஆற்றலும் அழகுணர்வும் கொண்ட சொற்றொடர்களாக விளங்கி வாசகனுடைய சிந்தைக்கு விருந்து படைக்கின்றன. சொல்-வாகனத்திலே கருத்தைப் பயணிக்க வைத்து அடையுமிடத்தில் உரிய வரவேற்பையும் மனப்பாங்கிலே நன்மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய வலிமை சிறந்த எழுத்தாளனது தேர்ந்தெடுத்த சொற்களுக்குண்டு.
ஆரம்பத்தில் பேரறிஞர் அண்ணாதுரை, கலைஞர் மு.கருணாநிதி, ரா.பி.சேதுப்பிள்ளை போன்றோரது அடுக்கு மொழியினால் கவரப்பட்டும், அதன்பின்னர் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை ஐயா அவர்கள், டாக்டர் மு.வ, திரு.வி.க, திரு.கி.வா.ஜகந்நாதன், சென்னைப் பல்கலைக்கழக துணை-வேந்தராகவிருந்து இளைப்பாறிய உயர்திரு. நெ.து. சுந்தரவடிவேல் பேராசிரியர் கல்கி போன்றோரது எழுத்து நடையிலே மகிழ்வு கண்டவன் நான். 
ஓரிரு சிறுகதைகள், சில இலக்கிய, சமய கட்டுரைகள், வானொலி மெல்லிசைப் பாடல்கள் சில எழுதியதோடு இரண்டு கவியரங்குகளிற் கலந்திருக்கின்றேன். இவை தவிர மிகுதியாக எதையுஞ் செய்யவும் இல்லை. செய்ய வேண்டுமென்ற எண்ணமும் என்னுள்ளத்தில் எழுந்ததில்லை. பலருக்கும் பயன்-படக்கூடிய வகையில் நல்ல கருத்த


க.சி.குலரத்தினம்
Kularatnam, C.S

ஈழத்துத் தமிழ்ப் புலமை மரபில் பல்துறை ஈடுபாட்டாளராக விளங்கியவர் க.சி.குலரத்தினம் ( 1916 - 1993 ). இவர் மரபு நவீனம் வழிவந்த மருகளை உள்வாங்கியவர். சைவாசிரியர் கலாசாலை மரபிலும் திளைத்தவர். தொடர்ந்து கால்நூற்றாண்டுக்கு மேலாக ஆசிரியப்பணி புரிந்தவர். கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் மட்டுமல்ல தொடர் ஆய்வு முயற்சிகளிலும் தீவரமாகச் ஈடுபட்டவர். செந்தமிழ் வளர்த்த செம்மல்கள், சைவம் வளர்த்த சான்றோர்கள், தமிழ் தந்த தாத்தாக்கள் போன்ற மூலம் ஈழத்துத் தமிழ் மரபின் தளமும் வளமும் பற்றிய தேடுகைக்கான ஊற்றுக்களையும் ஓட்டங்களையும் மீளுருவாக்கம் செய்தவர். நோத் முதல் கோபல்லா வரை என்னும் தூல் மூலம் வரலாற்று அரசியல் இணைப்புக்களை ஆய்வு ரீதியில் விளக்க முற்பட்டவர். அதன்மூலம் தமிழுணர்வு முகிழ்ப்பின் தோற்றப்பாடுகளையும் அடையாளம் காட்டியவர். இந்து நாகரீகம் தந்து இந்து ம