புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

இலங்கை நிர்வாக அரசியல்:சில பரிமாணங்கள்

நவீன அரசியல் சமூக வாழ்க்கையில் பொதுநிர்வாகம் முக்கிய இடத்தினை வகிக்கின்றது. ஒரு நாடு ஜனநாயக நாடாக மிளிர்வதற்கும் அவ் அரசினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் உரியமுறையில் வெற்றி பெறுவதற்கும் பொதுநிர்வாகம் இன்றியமையாதது ஆகும். மாறாக அந்நிர்வாகக் கட்டமைப்பு சீரில்லாது காணப்படுமாயின் அவை நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கோ, அல்லது அதனால் ஏற்படும் அரசியல் ஸ்திரமின்மைக்கோ அடிப்படையாக அமையலாம். இன்றைய அரசுகள் சமூக நலன்பேணும் ஸ்தாபனமாக விளங்குவதனால் அரசாங்கம் தன்னில் உறைந்துள்ள அதிகாரங்களை நிர்வாகத்திற்கு பரவலாக்கி மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றன. இதனால் அவை நிர்வாக அரசுகளாக வளர்ச்சி யடைந்ததனை தொடர்ந்து அவை பற்றிய ஆய்வுகள் முக்கியம் பெற்றதோடு 'அரசியல் நிர்வாகம்' என்ற கல்வியும் அரசறிவியலில் முக்கிய இடத்தினைப் பெற்றுக்கொண்டது. 
பொது நிர்வாகத்தில் இன்று உலகளாவிய ரீதியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பெருமாற்றம் ஒவ்வொரு நாட்டிலும் அதிகார பரவலாக்கத்திற்கு வித்திட்டுள்ளது. இவ் அதிகாரப் பரவலாக்கின் விளைவுதான் இலங்கையின் மாவட்டச் செயலகம் ஆகும்;. இந்த வகையில் மாவட்ட செயலகத்தின் தோற்றத்துக்கான பின்னணி, நோக்கம், நிர்வாக கட்டமைப்பு, அதன் செயற்பாடுகள், மாவட்ட செயலகம் எதிர்நோக்கும் சவால்கள், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக இலங்கையின் பொதுநிர்வாகத்தில் மாவட்டச் செயலகம் என்ற கட்டுரை அமைந்துள்ளது. 
அரசின் அதிகாரம் முழுமையாக ஒரு இடத்தில் குவிந்தால் மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றமுடியாது. இதனால


தை.தனராஜ்
Thanaraj, T

தையல்முத்து தனராஜ் மாணவ ஆசிரியராகத் தனது கல்விப் பணியினை ஆரம்பித்தவர். தொடர்ந்து ஆசிரியர் கலாசாலை, பல்கலைக்கழகம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பட்டங்கள் பெற்றுத் தனது தகுதியை, ஆளுமையை வளர்த்துக்கொண்டவர். பன்னாட்டு கல்விசார் பயிற்சிகளிலும் கல்வி மாநாடுகளிலும் பங்குபற்றியவர். 

இன்று கல்வியியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராகவும், வளவாளராகவும், ஆய்வாளராகவும் பரிணமித்து வருபவர். கற்றல், தேடல், ஆய்வு என்பதை தனது பண்புசார் கோலங்களாக வெளிப்படுதுபவர். தமிழ்மொழி மூலமான கல்விச்சூழல், புலமைத்துவம் தொடர்பான அகல்விரி சிந்தனைகளையும், விமரிசனங்களையும் மற்றும் நடைமுறைகளையும் தன்னகத்தே கொண்டு இயங்குபவர்.