புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

யாழ்ப்பணத்து மரபுக் கல்வியும் பண்பாடும்

யாழ்ப்பாணத்து மரபுவழிக் கல்விச் செயற்பாடுகளை விளக்கி விளக்கும் முறைமையின் ஓர் அம்சமாக 'யாழ்ப்பாணத்து மரபுக் கல்வியும் பண்பாடும்' எனும் நூல் அமைகின்றது. 
யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக்கொள்ளல் என்ற அறிகைச் செயற்பாட்டில் இந்நூல் முக்கியத்துவம் பெறுகின்ற ஓர் ஆக்கமா கின்றது. சமூக ஆக்கத்தின் வெளித்துலங்கும் பரிமாணமாக அமையும் பண்பாட்டுக்கோலங்கள் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. சமூகத்தை ஒற்றைப் பரிமாணத்திலே விளங்கிக்கொள்ளும் அணுகுமுறை சமூகம் பற்றிய தெளிவான புலக்காட்சியை நமக்கு ஏற்படுத்தமாட்டாது. 
சமூகத்தின் தளமாகவும் அடிக்கட்டுமானமாகவும் விளங்கும் பொருண்மியக் கட்டமைப்பின் விளக்கமின்றி யாழ்ப்பாணச் சமூகத்தை பொருட்கோடலுக்கு உள்ளாக்கிக் கொள்ளல் சாத்தியமன்று. யாழ்ப் பாணத்து நிலவுடைமைப் பொருண்மிய நிலையும் பெருநிலமுடைமை, சிறுநிலமுடைமை, நிலமற்றநிலை என்ற சொத்துரிமை இயல்புக ளுக்கும் சமூக நிரலமைப்புக்கும் சாதிய முறைமைக்குமுள்ள இணைப்புகள் அறிகை நிலைப்புலப்பாடுகளாகின்றன. 
அவ்வாறான பெருந்தொகுதியின் நெடுங்கோட்டு இணைப்பாக  மரபுவழிக்கல்வி முறைமை தொழிற்பட்டு வந்துள்ளது. வினைத்திற னுடன் இணைந்திருந்த அந்தக் கல்விப் பாரம்பரியத்தின் மீது மேலை நாட்டுக்கல்வி முறைமை இலகுவாக வேர்பதிக்க முடிந்தது. யாழ்ப் பாணத்து மரபுவழிக் கல்விமுறைமையின் பல்வேறு பரிமாணங்கள் இந்நூலில் உட்பொதியப்பட்டுள்ளன. பெண்கல்வி, இசைநடனக் கல்வி, தொழில்நுட்பக்கல்வி, கருவிக்கையாட்சி, கல்வி உளவியல், பண்பாட்டு உளவியல் முதலாம் பல்வேறு பரிமாணங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவ


செ.சிவலிங்கம்
Sivalingam, S

ஈழநாட்டிலே கந்தப்புராண வசனந் தோன்றியுள்ளது. கந்தப்புராணத்திற்கு பல அறிஞர்கள் உரையெழுதியுள்ளனர். நாமறிந்த வரையிலே கந்தப்புராணத்தைச் சுறுக்கிச் செய்யுலாகச் செய்த ஒரேயொரு தமிழறிஞர் பண்டிதர் சிவலிங்கம் அவர்களேயெனலாம்.
யாப்பறி புலவனான பண்டிதர் சிவலிங்கம் அவர்கள் கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு அருகே வைத்து ஆராயப்பட வேண்டியவர். இறைபக்தியும் புலமை பாரம்பரியமுங் கொண்ட ஒருவராலேதான் இத்தகைய முயற்சியிலீடுப்பட முடியும். இந்த இரண்டும் பண்டிதர் சிவலிங்கத்திற்கு வாய்த்திருக்கின்றன. இவரின் செய்யுள்களை நோக்கும் போது இவர் '  ஆழ்ந்திருக்கும் கவியுளம்' கண்டவராக கணிக்கப்படுகின்றார். 
கந்தப்புராணம் என்னும் கடலை இலகுவாகக் கடக்க உதவும் படகாக இவரின் 'கந்தப்புராணச்சுறுக்கம்'  என்னும் நூல் அமைகின்றது. பண்டிதர் சிவலிங்கம் கவிதை கலை கைவந்தவர்  என்பதற்கு இந்நூல் ச