புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

தலைமைத்துவக் கோட்பாடுகள்

'தலைமைத்துவக் கோட்பாடுகள்'  என்னும் தலைப்புடன் வெளிவரும் இந்நூல் எனது மூன்றாவது நூலாகும். இதனை எழுதி தமிழ் வாசகர்களுக்கு விசேடமாக தமிழ்மூலம் முகாமைத்துவம் பயிலும் மாணவர்களுக்கு சமர்ப்பிக்க முடிந்தமையை எண்ணி நான் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் மிக முக்கியமானது முகாமைத்துவ கற்கைநெறியில் தலைமைத்துவம் என்னும் தொனிப்பொருள் தொடர்பாக இருக்கக்கூடிய வெற்றிடத்தை இந்நூல் ஓரளவேனும் நிரப்பக்கூடும் என்னும் எனது பணிவான நம்பிக்கையாகும். 
எந்தவொரு நிறுவனத்தினதும் விளைதிறன் மேம்பாட்டுக்கு தலைமைத்துவம் மிகவும் முக்கியமானது. நிறுவனங்கள் மட்டுமல்லாது ஒரு குடும்பத்தின் மேம்பாட்டுக்கும் ஒரு தேசத்தின் வெற்றிக்கும் கூட தலைமைத்துவமே பங்களிப்பு வழங்குகிறது. எனவே, தலைமைத்துவம் தொடர்பான ஆய்வுகள் கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டன. அத்தகைய ஆய்வுகளின் விளைவாக தலைமைத்துவம் தொடர்பான சார்பிலக்கியம் மிகவும் செழுமையடைந்துள்ளது. இத்தொனிப்பொருள் தொடர்பாக நூற்றுக்கணக்கான ஆய்வுகள் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு எண்ணிறந்த கட்டுரைகள், நூல்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்றும் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. முகாமைத்துவம் தொடர்பான தொனிப்பொருள்களில் தலைமைத்துவம் பற்றியே அதிகளவில் ஆய்வு செய்யப்பட்டுள்ளதோடு நூல்களும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், தூரதிர்ஷ்டவசமாக ஏனைய அறிவியல் துறைகள் போலவே தலைமைத்துவம் தொடர்பாகவும் தமிழில் நூல்கள் அரிதாகவே உள்ளன. 
இன்று தனியா


மா.செல்வராஜா
M.Selvarajah

மட்டக்களப்பு மாநிலம் தந்த கல்வியாளுமை மா.செல்வராஜா. இவர் மட்டக்களப்பு கல்விப்பரம்பரியத்தின் தனித்துவமாக விளங்கும் இராமகிருஸ்ண மிஷன் மற்றும் சிவானந்தாக் கல்லூரியின் வளத்தையும் தளத்தையும் முழுமையாகத் தனதாக்கிக் கொண்டவர். தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழக மரபு வழியில் தோய்ந்து வளர்ந்து வந்தவர்.
கல்விப்புலத்தில் ஆசிரியர், அதிபர், விரிவுரையாளர், பேராசிரியர், ஆய்வாளர் என்ற வகிபாக மேலேழுச்சியில் பல உன்னதங்கள் கண்டடைந்தவர். கிழக்கு பல்கலைக்கழகத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவராக விளங்கியவர். குறிப்பாக மட்டக்களப்பு கல்வியியல்  'சமுகப் பரிமாணம்' பெற முழு மூச்சுடன் உழைத்து வருபவர். இதனால் உள்ளுர்க் கல்விச் சிந்தனை மூலங்களுக்கான சமூகத் தரிசனத்தையும் வெளிப்படுத்துபவர்.
கல்வி முகாமைத்துவம் தொடர்பான பாரம்பரிய அணுகுமுறைகள் சார்ந்து சிந்தனைகள், ஆய்வுகள் தாண்டி