புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

தமிழியல்சார் சிந்தனைத் துளிகள்

நமது மொழியை  நாமே அறிந்துகொள்ள...
பேராசிரியர் சு.சுசீந்திரராஜாவின் தமிழியல்சார் சிந்தனைத் துளிகள்
தொகுதி ஐ க்கான பாயிரக்குறிப்பு.
புலமைநிறை தோழமையுணர்வுடன்.

அமெரிக்க, ஐக்கிய அரசிலும், இங்கிலாந்திலும் ஆங்கிலமே பொது மொழியாகவிருப்பினும், அது இவ்விரண்டு இடங்களிலும் பேசப்பெறும், எழுதப்பெறும் முறைமை காரணமாக நாம் ஒரே மொழியால் பிரிக் கப்பட்டுள்ளவர்கள் (றுந யசந னiஎனைநன டில வாந ளயஅந டுயபெரயபந) என்று மிக ஆழமான மனத்திருப்தியுடன் கூறப்படுவது வழக்கம்.
பேராசிரியர் சுசீந்திரராஜாவின் இக்கட்டுரைத் தொகுதியை வாசிக்கும் பொழுது அத்தகைய ஓர் சிந்தனை நமது மனங்களிலே வந்து போவதை மறுதலிக்க முடியாதுள்ளது. தமிழகத்துப் பேச்சுத் தமிழுக்கும் நமது பேச்சுத் தமிழுக்குமிடையே வேறுபாடுகள் உள்ளன. தமிழகத்தை யும் நம்மையும் (ஈழத்தையும்) பொறுத்தவரையில் மேலதிக விசேடப் பண்பு ஒன்று உள்ளது. அதாவது, ஏறத்தாழ இரண்டாயிரம் வருடப்  பழைமையும் தொடர்ச்சியுமுள்ள தமிழ்மொழியின் புராதன சொல் வழக்குகளும் வடிவங்களும் இலங்கையிலேயே பெரிதும் பேணப்படு கின்றன என்பதாகும். 
மொழியியலை இலக்கணத்திலிருந்து வேறுபடுத்தி நோக்குவதிலே இன்னுந்தான் ஆசிரிய மட்டங்களிலே கூட புலமைத் தெளிவு காணப் படவில்லையென்று கூறப்படுமின்றைய வேளையில் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கின் இயல்புகளையும் அப்பேச்சு வழக்கில் இடம்பெறும் சொற் பயன்பாடுகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறும் இக்கட்டுரைத் தொகுதி நமது அத்தியாவசிய வாசிப்புக்குரியதாகிறது.
ஒட்டுமொத்தமான தமிழ்ச் செழுமைக்கு ஈழத்தவர்களின் பங்க ள


மு.பொன்னம்பலம்
Ponnambalam, M

1950களின் இறுதியிலிருந்து இன்றுவரை தீவிர இயக்கம் கொண்டவர். இவர் ஈழத்தின் நவீன கலை இலக்கிய பரப்பில் முக்கியமான ஆளுமை. கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, விமரிசனம், கட்டுரை என பல்வேறு களங்களிலும் இயங்கி வருபவர். தமக்கென்று கருத்துநிலைத் தெளிவு கொண்டவர். அதன் வழியே படைப்பாக்க உந்துதல் கொண்டு ஆத்ம தரிசனத்தின் பன்முகத்தை ஆராயும் பண்பை படைப்பாளுமையாக வெளிப்படுத்துபவர்.
மரபு வழியான அறிதல்முறை படைப்பாக்க முறைமை முதற்கொண்டு நவீனத்துவமான அறிதல்முறை, சிந்தனைமுறை சார்ந்து சுய விசாரணையில் ஈடுபடும் முதிர்ச்சியும் பக்குவமும் இவரது தனித்தியல்பாக உள்ளது. இதுவே சிறார் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு அதன் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் தன்னாலியன்ற பங்களிப்பை வழங்க முடிகின்றது.
 
சிறுவர்களுக்கு இலக்கியம் படைக்க வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக மட்டும் இலக்கியம் படைக்கும்