புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

இந்திய அறிவாராய்ச்சியியல்

மனிதவாழ்வின் அனைத்து முகங்களிலும் அறிவு வியாபித்துள்ளது. அதன் பரிமாணங்களை, முறையியல்களை, அவைசார்ந்த விமர்சனங்களை ஆய்ந்தறியும் துறையாக அறிவாராய்ச்சியல் வாய்த்துள்ளது. உலகளாவிய அறிவுத் திரள்களின் வேர்களைத்தேடும் இந்தப் பயணத்தில் பண்பாட்டுப் பன்மை நோக்கின் அவசியம் இன்று பெரிதும் உணரப்படும். இந்தவகையில் சுதேச அறிவின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் தேடல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. உண்மையில் அறிவாராய்ச்சியியலின் வித்துக்கள் கீழைத்தேய சிந்தனைகளி னூடாகவே செழுமைகண்டுள்ளமை வரலாறாகும். ஈழத்திலே இந்த கீழைமரபின் வித்துக்கள் ஞானப்பிரகாச முனிவரின் பிரமாண தீபிகையின் வரவுடன் வேர்விடக் காணலாம்.  இத்தகைய சூழமைவிலேயே கீழைத்தேய அறிவாராய்ச்சியியல் பற்றிய புரிதலுக்கான வழித்துணையாக பேராசிரியர் நா.ஞானகுமாரனின் இந்திய அறிவாராய்ச்சியல் வரவாகின்றமை மகிழ்ச்சி தருகின்றது. 
'மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்ற மகுட வாசகத்துடன் பண்பாட்டின் செழுங்கலை நியமமாக விளங்குவது எங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். அதன் மெய்யியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் நா.ஞானகுமாரன். சைவசித்தாந்தம் உட்பட கீழைமெய்யியல் பற்றிய தாடனத்துடன் ஏற்கனவே உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் உகந்த நூல்களைத் தந்தவர். பேராசிரியரின் இந்நூலானது இந்திய மெய்யியலின் பிரமாணங்கள் பற்றி விரிவாகப் பேசுகின்றது. இந்திய அறிவாராய்ச்சியிலின் ஆதார சுருதியாக அறிவினைப் பெறும் வழிமுறையாக விளங்கும்  அறிவின் வாயில்களே இப்பிரமாணங்கள். தமிழ் மரபில் அளவைகள்  என இவை  வழங

அமிர்தலிங்கம், கோ
Amirthalingam, K

கோபாலபிள்ளை நேசம்மா தம்பதியினரின் மகனாகிய கலாநிதி. கோ.அமிர்தலிங்கம் சம்புர் மகாவித்தியாலயத்தில் தனது பாடசாலைக் கல்வியினைக் கற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம், ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகம் என்பவற்றில் தனது பட்டப் படிப்புக்களை மேற்கொண்டுள்ளார். அமரிக்கா, கனடா, ஆர்ஜென்டீனா, சீனா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற பல சர்வதேச மாநாடுகளில் பல ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ள இவர் கலாநிதி.ரஜித் லக்ஸ்மனுடன் இணைந்து பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் புகழ்பெற்ற சஞ்சிகைகளான Journal of Refugee Studies மற்றும் Disasters என்பவற்றில் பலஆய்வுக் கட்டுரைகளை வெளிட்டுள்ளதுடன் இலங்கையிலிருந்து வெளிவரும் Sri Lanka Economic Journal போன்ற சஞ்சிகைகளிலும் பலஆய்வுக் கட்டுரைகளையும் வெளிட்டுள்ளார். இவரது இலங்கைப் பொருளாதாரம் என்னும் இலங்கையின் பலபல்கலைக்கழகங்களில் தோ்ந்