புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சமய உளவியல்

இது சமய உளவியல் தொடர்பாக தமிழில் முதலில் வெளிவரும் நூல். ஆங்கிலமொழியில் இத்துறையில் பெருந்தொகையான நூல்கள் வெளிவந்துள்ளன. பல்கலைக்கழகங்களில் இது ஒரு பாடத் துறையாகவும் வளர்ச்சியடைந்துள்ளது.
நவீன உளவியல் சமயத்தைப் பல பரிமாணங்களிலே ஆராய்கின்றது. அகவய நிலையில் மட்டுமன்றி புறவய நிலையிலும் சமயத்தை நோக்குதல் அறிவு நோக்கில் முக்கியமானது.
'ஒப்பியல் சமயம்' என்ற அறிவுத்துறையும் அண்மைக்காலமாகப் பெருவளர்ச்சியடைந்து வருகின்றது. சமய உளவியல் ஒப்பியல் நோக்கிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சமயங்களுக்கிடையே காணப்படும் பொதுத்தன்மைகள் அடிப்படையான மானிட இயல்புகளைப் புலப்படுத்துகின்றன. உளவியல் அதனை மேலும் ஆழ்ந்து நோக்குகின்றது.
இலங்கைப் பள்ளிக்கூடங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் சமயம் ஒரு பாடமாக இடம்பெற்றுள்ள நிலையில் சமய உளவியல் பற்றிய அறிவு மேலும் முக்கியத்துவம் பெறுகின்றது.
சிறப்பு வாசிப்பை மட்டுமன்றி, பொது வாசிப்பையும் கருத்திற் கொண்டு இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது.

சபா.ஜெயராசா

 


மு.பொன்னம்பலம்
Ponnambalam, M

1950களின் இறுதியிலிருந்து இன்றுவரை தீவிர இயக்கம் கொண்டவர். இவர் ஈழத்தின் நவீன கலை இலக்கிய பரப்பில் முக்கியமான ஆளுமை. கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, விமரிசனம், கட்டுரை என பல்வேறு களங்களிலும் இயங்கி வருபவர். தமக்கென்று கருத்துநிலைத் தெளிவு கொண்டவர். அதன் வழியே படைப்பாக்க உந்துதல் கொண்டு ஆத்ம தரிசனத்தின் பன்முகத்தை ஆராயும் பண்பை படைப்பாளுமையாக வெளிப்படுத்துபவர்.
மரபு வழியான அறிதல்முறை படைப்பாக்க முறைமை முதற்கொண்டு நவீனத்துவமான அறிதல்முறை, சிந்தனைமுறை சார்ந்து சுய விசாரணையில் ஈடுபடும் முதிர்ச்சியும் பக்குவமும் இவரது தனித்தியல்பாக உள்ளது. இதுவே சிறார் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு அதன் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் தன்னாலியன்ற பங்களிப்பை வழங்க முடிகின்றது.
 
சிறுவர்களுக்கு இலக்கியம் படைக்க வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக மட்டும் இலக்கியம் படைக்கும்