புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

ஆத்திசூடி

ஆத்திசூடி என்பது நல்லிசைப் புலமை வாய்ந்த 'ஒளவையார்'  என்னும் மெல்லியலார் அருளிய நூல்களுள் ஒன்று. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும், பல தனிப்பாக்களும், ஒளவையார் இயற்றின வென்ப. கம்பர் முதலிய புலவர்கள் விளங்கிய காலத்தில் இருந்தவர் இவர். இவரைக் குறித்து எத்தனையோ பல கதைகள் வழங்குவதுண்டு. கடைச்சங்க நாளிலே புலமையிற் சிறந்து விளங்கிய மகளிரில் ஒளவையார் என்னும் பெயரினரும் ஒருவர். அவர் பாடிய பாட்டுகள் புறநானூறு முதலிய சங்க நூல்களில் சேர்க்கப்பட்டுள்ளன. அவர் அதியமான்  என்னும் வள்ளல் அளித்த அமுதமயமான நெல்லிக்கனியை உண்டு நெடுங்கால உயிர் வாழ்ந்தனரெனச் சங்க நூல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சங்ககாலத்து ஒளவையாரும் வேறு; கம்பர் காலத்து ஒளவையாரும் வேறு என்பது இற்றைநாள் ஆராய்ச்சியாளர் கொள்கையாகும். 
தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர்களிலும், பெண்டிர்களிலும் கற்றவர்களும், கல்லாதவர்களும் ஆகிய யாவரும் ஒளவையென்னும் பெயரை அறிந்திருப்பர். அப்பெயரை அறியாதார் மிகவும் அரியர். அதற்ககுக் காரணம் அவரியற்றிய ஆத்திசூடி முதலிய நீதி நூல்களேயாகும். தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பெற்ற பெருமை வாய்ந்தவை அவை. தமிழிற் சிறிது பயிற்சியுடையாரெவரும் ஒளவையாரின் நீதிநூல்களுள் ஒன்றையாவது படித்தேயிருப்பர். பல பெரிய நூல்களின் சாரமாகவுள்ள நீதிகளும் கருத்துகளும் ஆத்திசூடியிலும், கொன்றைவேந்தனிலும் சிறுசிறு சொற்றொடர்களில் தெளிவுற அமைக்கப்பெற்று விளங்குகின்றன. 
இளம்பருவத்தினர் எளிதாய்ப்


லூயிஸ், ஜே. பி
Lewis, J. P

ஜே.பி.லூயிஸ் அவர்கள் 1889 யூலை 15 தொடக்கம் டிசம்பர் 14 வரை                     உதவி அரசாங்க அதிகாரியாக வன்னியில் பணிபுரிந்தார். 
இவர் ஆயரெயட ழக ஏயnni னுளைவசiஉவள (1895) டுளைவ ழக ஐளெஉசipவழைளெ ழக வழஅளவழநௌ யனெ ஆழரெஅநவெள in ஊநலடழn றiவா யn ழுடிவைரயசல ழக Pநசளழளெ ருn ஊழஅஅநஅழசயவநன (1913) என்னும் நூல்களை வெளியிட்டார். 

இவை இரண்டும் வன்னியின் அரசியல்இ பொருளியல் வரலாற்றுக்கான 
விலை மதிக்க முடியாத கருவூலங்களாகும். 
1846-47 காலப்பகுதியில் பொலிஸ் நீதவானாகவும்இ உதவி அரசாங்க அதிபராகவும் ஹென்றி போல் என்பவரும்இ 1892ல் அரசாங்க அதிபராக இருந்த ஷோட்டும்இ 
1819ல் பதவி வகித்த டைக் என்ற அரசாங்க அதிபரும் வன்னிப் பிரதேச வரலாற்றுக்குத் தேவையான பல தகவல்களை தமது நாட்குறிப்பில் வழங்கியுள்ளனர். 

19ம் நூற்றாண்டின் வன்னிப் பிரதேச நிர்வாகத்துக்கும்இ நீதி பரிபாலனத்துக்கும் பொறுப்பாக இருந்