புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சமகாலக் கல்வி முறைகளின் சில பரிமாணங்கள்

ஆசிரியர்களுக்கான தொழில்முறைக்கல்வி 'கல்வியியல்' எனப் பொதுவாகச் சுட்டப்பட்டாலும் அதில் ஏராளமான துணை நெறிகள் உண்டு. கல்வி உளவியல், கல்விச் சமூகவியல், பொதுக்கற்பித்தலியல், கல்வி மதிப்பீடு, கல்வித்தத்துவம் எனப் பலவாறாக விரிந்து செல்லும் கல்வியியலின் ஒரு பிரதான துணைப்பிரிவு 'ஒப்பியல் கல்வி' ஆகும். உலக நாடுகளின் கல்வி முறைகளின் போக்குகள், வளர்ச்சிகள் என்பன இதில் முறையாக, வரலாற்று ரீதியாக ஆராயப்படுவதும் அவ்வாறான போக்குகளுக்கும் வளர்ச்சிகளுக்குமான காரணங்கள், அவற்றில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் பற்றிய ஆய்வு ரீதியான நோக்கு இக்கற்கை நெறியின் உள்ளடக்கமாகும்.
ஆசிரியர்கள் மட்டுமன்றி இலங்கையின் கல்விமுறை தொடர்பாகக் கொள்கையாக்கம் மற்றும் சீர்திருத்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ள உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அறிஞர்களும் ஒப்பீட்டுக்கல்வியில்; ஆர்வம் கொண்டவர்கள்; இலங்கையின் கல்வி வளர்ச்சி பற்றிய நிதானமான மதிப்பீட்டைச் செய்ய, ஏனைய வளர்முக நாடுகள், குறிப்பாக அயலில் உள்ள தென்னாசிய, தென்கிழக்காசிய மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளின் கல்விமுறை பற்றிய அறிவும் தெளிவும் தேவை. இவ்வாறான பின்புலத்திலேயே இலங்கையின் கல்வி வளர்ச்சி பற்றிய மதிப்பீடுகளைச் செய்வதோடு, எதிர்கால வளர்ச்சிக்கான கொள்கைகள், சீர்திருத்தங்கள் தொடர்பாகக் காத்திரமாக சிந்திக்க முடியும்.
இவ்வகையில், உலக நாடுகளின் கல்வி மற்றும் இலங்கையின் கல்வி வளர்ச்சி தொடர்பான கட்டுரைகளைக் கொண்ட இந்நூல் ஆசிரியர்களுக்கும் கல்வித்துறையின் மேம்பாட்டுக்காக உழைத்து வரும் மற்றோருக்கும் பயன்படும் என ந


கே.ரீ.கணேசலிங்கம்
Kanesalingam, K.T

கே.ரீ.கணேசலிங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் விரிவுரையாளராக உள்ளார். இவர் கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் மட்டுமன்றி, ஆய்வுக் கலாச்சாரத்திலும் முழுமையான ஈடுபாடு கொண்டவர். இதற்கான தகுதியை ஆளுமையை அறிவை விருத்தியாக்குவதில் தீவிர ஈடுபாடு கொண்டவர். 

இவர் எண்பதுகளுக்குப் பின்னர் உருவான புதிய தலைமுறைக் குழாமைச் சாரந்தவர். இதனால் சமூகப் பொறுப்பு, அரசியல் நிலைப்பாடு, கருத்து நிலைத் தெளிவு, பன்முகத் தேடல், போன்ற உயரிய பண்புகளை உள்வாங்கும் திறன் கொண்டவர். இதற்கான மனப்பாங்கு, ஆளுமை விகசிப்பு, ஆய்வு பனப்பாங்கு போன்றவை இவரது பலமான அம்சங்களாகும். திழில் அரசியல் கலாச்சாரம் பற்றிய சிந்தனைக்கும் ஆய்வுத் தேடலுக்கும் புதுக்களங்களை அடையாளங்காட்டுவதில் முனைப்புடன் உழைத்த