புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்வியில் எழு வினாக்கள்

எழுவினாக்கள் எழுபொருள்கள் எனவும் குறிப்பிடப்படும். கல்விச் செயல்முறையின் விரைந்த மாற்றங்களுடன் பிரச்சினை களும் தொடர்ந்து மேலெழுந்த வண்ணமிருக்கும். பிரச்சினைகளைக் குவியப்படுத்தும் கருத்தாடல்கள் செல்லும் வழியைச் செம்மைப் படுத்த உதவும்.
எழுபொருள்களின் கருத்தாடல் முக்கியத்துவத்தை அறிந்து பல்கலைக்கழகங்களும் ஆசிரிய கலாசாலைகளும், கல்வியியற் கல்லூரிகளும் தத்தமது பாடத்திட்டங்களில் இதனை உள்ளடக்கி வருகின்றார்.
கல்வியியல் சார்ந்த கருத்துக்களையும், முன்மொழிவுகளையும் திறனாய்வின்றி உள்வாங்கும் அறிவூக்கமற்ற நிலையிலிருந்து விடுபட வைப்பதற்குரிய கருத்தாடல்கள் பலநிலைகளிலும் வேண்டப்படு கின்றன. திறனாய்வும், மீள்வாசிப்பும் இன்றி முன்னேற்றங்களை எட்ட முடியாது.
கல்வியியல் அதற்கென உரிய தனித்துவமான சொல்லாடல் களைக் கொண்டுள்ளது. அறிவு நீண்டு வளர்ந்து செல்லும்பொழுது அதற்குரிய புதிய புதிய கலைச்சொற்களும் தோற்றம்பெற்ற வண்ண மிருக்கும். அந்த நடப்பியலைப் புரிந்துகொள்ளும் பொழுது புதிய சொற்கள் மலைப்பை உண்டாக்காது மகிழ்ச்சியை உண்டாக்கும். சொற்பெருக்கு மொழி வளர்ச்சியின் சுட்டியாகும். 
இந்நூலாக்கத்துக்குத் துணை புரிந்த நண்பர்களும், சேமமடு பதிப்பகத்தினரும் நன்றிக்குரியவர்கள். பயனுள்ள நூல்களைத் தந்த பிரித்ததானிய கழக நூலகத்தினருக்கும் நன்றி
சபா.ஜெயராசா


ஏ.றமீஸ்
A.Rameez

சாதாரண குடும்பத்தில் பிறந்த கலாநிதி றமீஸ் அபூபக்கர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சமூகவியல் விசேடதுறையில் 2004ல் முதல் நிலையில் சித்தியடைந்த்தன் விளைவாக அதே பல்கலைக்கழகத்தில் நிரந்தர விரிவுரையாளாக நியமிக்கப்பட்டார். பின்னர் தனது முதுமானி பட்டத்தினை பேராதனை பல்கலைக்கழகத்தில் பெற்ற இவர், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்புலமைப்பரிசிலைப் பெற்று தனது கலாநிதிப்பட்டத்தை பூர்த்தி செய்தார். அது மட்டுமன்றி முரண்பாட்டும் தீர்வையும் சமாதான ஆயத்தங்களும் கற்றைநெறியை பிரித்தானியாவில் பிரட்பேட் பல்கலைக்கழகத்திலும் பூர்த்தி செய்திருக்கின்றார். சமூக விவகாரங்களிலும் ஆய்வுப்பணியிலும் அதிகம் அக்கறை காட்டும் இவர் சிறந்த அரசியல் ஆய்வாளரும் ஆவார்.