புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

பாடசாலை முகாமைத்துவம்:கோட்பாடுகளும் பிரயோகங்களும்

கல்வியுலகில் எனது இரண்டாவது பிரசவமாக 'பாடசாலை முகாமைத்துவம்' என்னும் இத் தொகுப்பு அமைந்துள்ளது. எனது முதலாவது வெளியீடாகிய 'கலைத்திட்ட மாதிரிகைகள்'; ஆசிரிய உலகில் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருந்தமை இந்நூல் வெளிவரக் காரணமாக அமைந்தது  எனலாம். வழமையாகக் கோட்பாடுகளை மாத்திரமே உள்ளடக்கிய கட்டுரைகளை உள்ளடக்கமாகக் கொண்டதாக இவை போன்ற நூல்கள் வெளிவருவது கண்கூடு. இந்நிலையில் கோட்பாடுகளை இலகுவாகப் புரியவைக்கும் வண்ணம்  பிரயோக உதாரணங்கள் உள்வாங்கப்பட்டு இந்நூல் உருப்பெற்றுள்ளது. நேரடியாகக் கண்டும், கேட்டும் பெற்ற தகவல்களைக் கொண்டும், சுய அனுபவங்களைக் கொண்டும் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கல்விக்கல்லூரிகள், ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள், ஆகியவற்றில் கற்கும் மாணவர்களுக்கும், கல்விமாணி , பட்டப்பின் கல்வி டிப்ளோமா, பட்டப்பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா, கல்வி முதுமாணி, ஆசிரிய கல்வியில் முதுமாணி, கல்வித் தத்துவமாணி போன்ற பாட நெறிகளைப்  பின்பற்றும் மாணவர்களுக்கும், பொது முகாமைத்துவம் , பாடசாலை முகாமைத்துவம், கல்வி நிர்வாகம், போன்ற விடயங்களில் தெளிவும், விளக்கமும் பெற இந்நூல் வரப்பிரசாதமாக அமையும் என்பது எனது நம்பிக்கையாகும். அது தவிர கல்வித்திணைக்களங்களில் கடமையாற்றும் கல்விசார் உத்தியோகத்தர்களுக்கும,;  பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கும் தமது நிர்வாக முகாமைத்துவ நடவடிக்கைகளைச் சரிவரச் செய்வதற்கும், தம்மைச் சுயமதிப்பீடு செய்து கொள்வதற்கும் இந்நூல் மிகத் துணைபுரியும் என்பதும் எனது எதிர்பார்ப்பாகும்.  
கல்வித்துறையில்


சு.வித்தியானந்தன்
Vithiyananthan, S Prof

பேராசிரியர் முனைவர் சுப்பிரமணியம் வித்தியானந்தன் இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துத் தமிழியல் ஆய்வில் ஒரு நிறுவனம். இவரது பணிகள் பன்முகப் பரிமாணம் கொண்டவை. குறிப்பாகப் பல்கலைக்கழகத்தைச் சமூகத்துடன் இணைத்துப் பலவேறு புத்தாக்கக் கட்டங்கள் உருவாகக் காரணமாக இருந்தவர். 

வித்தியானந்தன் வழிவந்த சால்புகளும் சிந்தனைகளும் சமகாலத் தமிழ்பேசும் மக்களின் சமூக அரசியல் பண்பாடு உட்கிடக்கைகளின் உயிர்ப்புத்தளமாகவும் அமைந்திருந்தன. அவை பன்மைத்துப் பண்பாட்டின் அடையாளங்களை அடையாளப்படுத்தியும் அவை சார்ந்த கருத்தியல் தளத்தையும் உருவாக்கி நின்றன. 

தமிழ் உணர்வின் தமிழ்ப் பிரக்ஞையின் உருத்திரட்சிக் கருத்துநிலையின் - தமிழ்த் தேசியத்தின் - பரப்பாளராவும் அதன்