புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

வித்தியின் பார்வையும் பதிவும்

இக்கட்டுரைகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு நோக்கங்களுக்காக எழுதப்பட்டவை. கட்டுரைகளாக, முன்னுரைகளாக, அணிந்துரைகளாக எழுதப்பட்டவற்றை தொகுப்பாளர்கள் தி.கமலநாதன், தெ.மதுசூதனன் ஓரிடமாகத் தொகுத்துத் தந்துள்ளார்கள். தொகுப்பாளர்கள் காலத்தின் தேவை கருதி, பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களுக்குப் பெருமை தேடும் முறையிலும் தமிழ்ப் பெரியார்களை இளந்தலைமுறையினருக்கு மீள் அறிமுகம் செய்யும் நோக்கிலும் தொகுத்துத் தந்துள்ளனர்.

இந்நூலில் ஆராயப்படும் தமிழ்ப் பெரியார்கள் தமிழ் மக்களால் மறக்கப்பட முடியாதவர்கள். தமிழ்ர் வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் பிரதான இடத்தை வகிக்கும் அளவுக்கு, வேறுபட்ட முறையில் பல்வகைப் பங்களிப்புகளைச் செய்து தமது பன்முக ஆளுமையை வெளியிட்டவர்கள்.


ச.முத்துலிங்கம்
Muthulingam, S

பேராசிரியர் முனைவர் ச.முத்துலிங்கம் கல்வியியல் துறைசார் முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர். இவர் தமிழில் கல்வியியல் துறையின் விரிவுக்கும் ஆராய்ச்சிக்கும் புதுத்தடம் அமைத்துக் கொடுத்தவர். இன்று கல்வியியல் பன்துறை அறிகை மரபுகளின் குவிமுனையாக தமிழில் மேலெழுச்சி பெற்று வருவதற்கு தெளிவான சிந்தனைப் புலத்தையும் ஆய்வுக் களத்தையும் உருவாக்கி வளர்த்தெடுப்பதில் பெரும் பங்கு கொண்டவர். கலவி உளவியல் எனும் பொருட்பரப்பில் ஆசிரிய மாணவர்களை முழுமையாக ஈடுபாடு கொள்ளவும் இச்சிந்தனைத் தொடர்ச்சியின் முளுமையை உள்வாங்கவும் சாதகமான சூழலை உருவாக்க முன்னின்று உழைத்தவர். இத்துறைசார் அடிப்படை எண்ணக்கருக்களை அறிக்கை மரபுகளை தமிழில் தெளிவாக எடுத்துரைக்கும் முறைமைக்குத் தடம் அமைத்தவர்.