புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

ஆசிரியர் வாண்மையியல்

ஆசிரியர் வாண்மையியல் பற்றிய விரிவான நூல் ஒன்றின் தேவையை தொழிற்சங்கக் கருத்தரங்குகளிலே அவ்வப்போது தெரி வித்து வந்துள்ளனர். நாட்டின் கல்வி வளம் ஆசிரிய வாண்மை வளத்திலே தங்கியுள்ளது. ஆசிரிய வாண்மையின் நலிவு கல்வியின் நலிவாகவும் நாட்டின் ஒட்டு மொத்தமான மேம்பாட்டின் நலிவாக வும் மாற்றமுறும் இயல்பைக் கொண்டது. 
ஆசிரியர் மீதான அக்கறையை வளர்க்கும் அறிகைக் காட்சியை உருவாக்குதலே இந்நூலாக்கத்தின் சிறப்பார்ந்த இலக்காக அமைந் துள்ளது. மூன்றாம் உலக நாடுகளில் மிகுந்த நெருக்கடிகளின் மத்தியிலேதான் ஆசிரியர் தமது பணிகளை முன்னெடுக்கின்றனர். எதிர்மறையான அரசியல் தலையீடுகளுக்கும் உள்ளாக்கப்படு கின்றனர். 
அறிவின் பிரவாகத்தை உருவாக்குபவர்களும் அவற்றின் அறைகூவல்களை எதிர்கொள்பவர்களும் ஆசிரியர்களாக இருத்த லினால் அறிவுப் பொருளாதாரத்திலும் அறிவார்ந்த சமூகத்திலும் அவர்களின் வகிபாகம் மேலும் முக்கியத்துவம் பெறத் தொடங்கி யுள்ளது. 
மேற்கூறியவற்றின் எழுபுலத்தில் இந்நூல் ஆசிரியருக்கு முன்னீடாகத் தரப்படுகின்றது. இந்நூலாக்கத்துக்குத் துணை நின்ற நண்பர்களும் வெளியீட்டாளரும் நன்றிக்குரியவர்கள். 

சபா.ஜெயராசா


எஸ்.அன்ரனி நோர்பேட்
Antony Norbert, S

சூசைப்பிள்ளை அன்ரனி நோர்பேட் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவர் புவியியல் கற்கையின் சமகாலச் செல்நெறிகளையும் மாற்றங்களையும் உடனுக்குடன் உள்வாங்கி கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் புதிய நுட்பங்களை விருத்தி செய்து வருபவர். 

சமூக அறிவியல் துறைகளின் வளர்ச்சிகளை இற்றைப்படுத்திக் கொண்டு புதிய ஆய்வுக் கலாச்சார விருத்தியிலும் முனைப்புடன் இயங்குபவர். சர்வதேச ஆய்வுக் கருத்தரங்குகளிலும் ஆய்விதழ்களிலும் கட்டுரைகள் வழங்கி வருபவர். 

தமிழ்மொழி மூலமான புவியியல் கற்றைசார் புலமையின் விரிவாக்கத்திற்கு வளம் சேர்த்து வருபவர். இத்துறைப் பேராசிரியர்களின் வழித்தடங்களிலிருந்து மாறுபட்டு இயங்குபவர்.