புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்வி நிர்வாகமும் முகாமைத்துவமும்

கல்வி முகாமைத்துவம் மற்றும் நிர்வாகம் தொடர்பான திறனாய்வு நிலைப்பட்ட நூல்களின் தேவை காலத்தின் பணிப்பாக எழுச்சி கொண்டுள்ளது. ஏற்கனவே இத்துறையில் பயனுள்ள முயற்சிகள் பல நண்பர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 
கோட்பாட்டு நிலையிலும் நடைமுறை நிலையிலும் எதிர்-கொள்ளப்படும் பிரச்சினைகளும், மாற்றுவகை நோக்கும் நூலின் உட்பொதிவில் அடங்கியுள்ளன. பெரும்பாலான முகாமைத்துவ நூல்கள் பல அடுக்குகள் கொண்ட கூம்பு வடிவிலான பாரம்பரியமான முகாமைத்துவ இயல்புகளைச் சிலாகித்துப் பேசியும், வினைத்திறன்களை சமூக மாற்றங்களோடு இணைத்து நோக்காது உள்ளதை மீள வலியுறுத்தும் வகையிலும் சித்திரிப்புக்களை மேற்கொள்ளும் நிலையில் மாற்றுவகைச் சிந்த-னைகளை வலியுறுத்தும் புலமை இயக்கங்கள் எழுச்சி கொண்டன.
கூம்புநிலை முகாமைத்துவத்தை மறுதலித்து தட்டை நிலை ஒழுங்கமைப்பை (குடயவ ழுசபயnளையவழைn) மார்க்சியம் வலியுறுத்தியது. மத்திய ஆதிக்க வலியுறுத்தலில் இருந்து ஓரங்களுக்குச் செல்லலைப் பின்னவீனத்துவம் வலியுறுத்தியது. இவை பற்றிய கருத்தாடலை உள்ளடக்கிய நூலாக்கத்தின் தேவையை வலியுறுத்தும் நண்பர்கள் பேராசிரியர் சோ.சந்திரசேகரன், மதுசூதனன் மற்றும் சேமமடு பதிப்பகத்தினர் நன்றிக்குரியவர்கள்
சபா.ஜெயராசா


ச.முத்துலிங்கம்
Muthulingam, S

பேராசிரியர் முனைவர் ச.முத்துலிங்கம் கல்வியியல் துறைசார் முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர். இவர் தமிழில் கல்வியியல் துறையின் விரிவுக்கும் ஆராய்ச்சிக்கும் புதுத்தடம் அமைத்துக் கொடுத்தவர். இன்று கல்வியியல் பன்துறை அறிகை மரபுகளின் குவிமுனையாக தமிழில் மேலெழுச்சி பெற்று வருவதற்கு தெளிவான சிந்தனைப் புலத்தையும் ஆய்வுக் களத்தையும் உருவாக்கி வளர்த்தெடுப்பதில் பெரும் பங்கு கொண்டவர். கலவி உளவியல் எனும் பொருட்பரப்பில் ஆசிரிய மாணவர்களை முழுமையாக ஈடுபாடு கொள்ளவும் இச்சிந்தனைத் தொடர்ச்சியின் முளுமையை உள்வாங்கவும் சாதகமான சூழலை உருவாக்க முன்னின்று உழைத்தவர். இத்துறைசார் அடிப்படை எண்ணக்கருக்களை அறிக்கை மரபுகளை தமிழில் தெளிவாக எடுத்துரைக்கும் முறைமைக்குத் தடம் அமைத்தவர்.