புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

இலங்கையின் வன்னி மாவட்டங்கள் : ஒரு கையேடு

ஒரு நூற்றாண்டு காலத்திற்கு நீடித்திருந்த நிர்வாகத்தினை பெருமளவில் வெளிக்கொணரும் வகையில் ஒரு குறிப்பிட்ட வருடத் தைச் சார்ந்ததல்லாது, பேரளவு நிர்வாக அறிக்கையாகும் இவ் ஒருங்கி ணைப்புகள் பற்றி ஒரு சில வார்த்தைகள் கூறுவது அவசியமாகிறது. 
அதிக அளவு விபரங்களைக் கொண்டு நீண்டதாகக் கூறுவது பிழையாயின், அவ்வாறு அமைந்தமை (முல்லைத்தீவு - வவுனியா ஆகிய இரு மாவட்டங்களிலுமுள்ள) இரண்டு கச்சேரிகளிலும் 1892ம் ஆண்டு வரை இருந்த நாட்குறிப்பேடுகளிலிருந்துழூ பெறப்பட்ட மேலோட்டமான ஒரு பகுதித் தகவல்கள் தான் என்பதைக் கருத்திற் கொள்ளத் தூண்டுகிறேன். கைந்நூலிலிருந்து மேற்கோள்கள் தவிர கருத்திற் கொள்ளக்கூடிய எந்த ஒரு பகுதியும் தவிர்த்து விடப்பட வில்லை என்பதனைப் பவ்வியமாகக் கூறுகின்றேன். உண்மையில், இவற்றை முதன்முறையாக வாசிக்கும்போது ஏற்படும் சிந்தனைகளால் இத்தகவல்கள் அனைத்தும் மிகவும் உறுதியானவையென உரிமை பாராட்ட முடியாது. ஏனெனில், காரியாலய நாட்குறிப்பேடுகள் பெருமளவில் அன்றாட சம்பவங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பன. 
ஆகையால், சில எல்லைகளை நாம் வகுக்க வேண்டிய நிலை ஏற்படக் காரணிகளாக அமைந்தவை, இக்கைந்நூலை ஆக்குவதற்குத் தேவையான உள்ளீடுகள் அந்தந்த இடங்களிலேயே திரட்டப்பட்டா லும், அவைகளை வடிவமைத்த போது, நான் சம்பந்தப்பட்ட இடங் களிலிருந்து வெளியேறியதும், சம்பவங்களுக்குரிய மாவட்டங்களி லிருந்து வெகு தூரத்திலிருந்தமையுமாகும்.
எவ்வாறான பூரணத்துவம் இல்லாதிருந்தாலும், நான் எவ்வித சிரமங்களையும் பாராது, இந்நூலைச் சரியான தகவல்கள் கொண்டதாக அமைத்துள்ளதோடு, எனக்குப்


சு.பராமானந்தம்
Paramanantham,S

சுப்பிரமணியம் பரமானந்தம் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராக - ஆசிரியக் கல்வியியலாளராகப் பணிபுரிகின்றார். இவர் தொடர்ந்து கற்றல் - கற்பித்தல் பணியுடன் மட்டுமல்லாமல் முழுமையான ஆய்வுப் பணியிலும் ஈடுபாடு கொண்டவர்.
 
கல்விச் செயன்முறை, கற்பித்தலியல், ஆசிரியம் தொடர்பான உரத்த சிந்தனையும் தேடலும் மற்றும் ஆய்வு செய்வதற்குரிய மனப்பாங்கும் உழைப்பும் கொண்டவர். இதற்குரிய கருத்தாடலை வெளிப்படுத்துவதில் வளர்ப்பதில் நிதானமான நேர்நிலை அணுகுமுறையைக் கைக்கொள்பவர்.கோட்பாட்டு வழியிலான மொழியாக்கத்திலும் பிரயோகத்திலும் சமாந்தரமாக இயங்கும் ஆற்றல் கொண்டவர்.
 
சமூக நோக்கும் தத்துவத் தரிசனமும் புலமைத்துவத்தை ஆற்றுப்படுத்தும் என்பதில்  நம்பிக்கை கொண்டவர். இதற்காக தீவிரமாக உழைக்கவும் புத்தாக்கமான சிந்தனைகளை கற்றறியவும் விருப்பம் கொண்டவர்.  புதி