புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

காஷ்மீரசைவமும் சைவசித்தாந்தமும்

மெய்யியல் கற்கைப்புலம் மிக அகலமானதும் ஆழமானதும் ஆகும். ஏனைய துறைகளுள்ளும் புகுந்து நின்று கோலோச்சும் துறையிது. இந்திய - இந்து மெய்யியற் கற்கைப் புலத்தில் கல்வி பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ளமையைப் பேறெனக் கருதலாம். மரபுவழிக் கல்வியாளர்களிடமும் பல்கலைக்கழகத்தின் இந்துநாகரிக, மெய்யியற்துறைகளின் புலமைத்துவம் சார் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களிடமும் கற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இதன் வழி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். நா.ஞானகுமாரன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் 'சைவசித்தாந்த, காஷ்மீரசைவ மெய்யியலமைப்பு - ஓர் ஒப்பீட்டாய்வு' எனும் தலைப்பில் முதுதத்துவமாணி கற்கை நெறியை மேற்கொண்டு அதனை நிறைவு செய்தேன். அவ்வாய்வும் அதன் வழி பெற்ற அறிவையும் அடிப்படையாகக் கொண்டு 'காஷ்மீர சைவமும் சைவசித்தாந்தமும்' எனும் இந்நூல் வெளிவருகின்றது.
இந்திய தேசமெங்கும் பரவியிருந்த சைவம் பெருஞ்சமயமாக - தத்துவமாக அமையும் விதத்தில் தன் கட்டமைவுகளைத் தக்கவைத்துக் கொண்டது. அந்த வகையில் காஷ்மீரத்தில் நிலவிய ஒருமைவாத சைவத்தையும் தமிழ்நாட்டில் நிலவிய பன்மைவாத சைவசித்தாந்தத்தையும் ஒப்பிடுவதாக இந்நூல் அமைகிறது. அதேவேளை காஷ்மீரத்தில் சத்தியஜோதி உள்ளிட்டோரால் பன்மைவாத சைவமான சைவசித்தாந்தம் நிலைப்படுத்தப்பட்டதையும் அதற்கான நூல்களாக அஷ்டப்பிரகரண நூல்கள் திகழ்கின்றன என்பதையும் அறிய முடிகிறது. அத்தோடு காஷ்மீர சைவத்தின் முக்கியஸ்தரான அபிநவகுப்தரின் குரு சம்புநாதர், அர்த்த திரியம்பக சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்; அவரின் குருவும் பரமகுருவும் முறையே சோமநாதரும் சுமத


அமிர்தலிங்கம், கோ
Amirthalingam, K

கோபாலபிள்ளை நேசம்மா தம்பதியினரின் மகனாகிய கலாநிதி. கோ.அமிர்தலிங்கம் சம்புர் மகாவித்தியாலயத்தில் தனது பாடசாலைக் கல்வியினைக் கற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம், ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகம் என்பவற்றில் தனது பட்டப் படிப்புக்களை மேற்கொண்டுள்ளார். அமரிக்கா, கனடா, ஆர்ஜென்டீனா, சீனா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற பல சர்வதேச மாநாடுகளில் பல ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ள இவர் கலாநிதி.ரஜித் லக்ஸ்மனுடன் இணைந்து பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் புகழ்பெற்ற சஞ்சிகைகளான Journal of Refugee Studies மற்றும் Disasters என்பவற்றில் பலஆய்வுக் கட்டுரைகளை வெளிட்டுள்ளதுடன் இலங்கையிலிருந்து வெளிவரும் Sri Lanka Economic Journal போன்ற சஞ்சிகைகளிலும் பலஆய்வுக் கட்டுரைகளையும் வெளிட்டுள்ளார். இவரது இலங்கைப் பொருளாதாரம் என்னும் இலங்கையின் பலபல்கலைக்கழகங்களில் தோ்ந்