புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

இலங்கை நிர்வாக அரசியல்:சில பரிமாணங்கள்

நவீன அரசியல் சமூக வாழ்க்கையில் பொதுநிர்வாகம் முக்கிய இடத்தினை வகிக்கின்றது. ஒரு நாடு ஜனநாயக நாடாக மிளிர்வதற்கும் அவ் அரசினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் உரியமுறையில் வெற்றி பெறுவதற்கும் பொதுநிர்வாகம் இன்றியமையாதது ஆகும். மாறாக அந்நிர்வாகக் கட்டமைப்பு சீரில்லாது காணப்படுமாயின் அவை நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கோ, அல்லது அதனால் ஏற்படும் அரசியல் ஸ்திரமின்மைக்கோ அடிப்படையாக அமையலாம். இன்றைய அரசுகள் சமூக நலன்பேணும் ஸ்தாபனமாக விளங்குவதனால் அரசாங்கம் தன்னில் உறைந்துள்ள அதிகாரங்களை நிர்வாகத்திற்கு பரவலாக்கி மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றன. இதனால் அவை நிர்வாக அரசுகளாக வளர்ச்சி யடைந்ததனை தொடர்ந்து அவை பற்றிய ஆய்வுகள் முக்கியம் பெற்றதோடு 'அரசியல் நிர்வாகம்' என்ற கல்வியும் அரசறிவியலில் முக்கிய இடத்தினைப் பெற்றுக்கொண்டது. 
பொது நிர்வாகத்தில் இன்று உலகளாவிய ரீதியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பெருமாற்றம் ஒவ்வொரு நாட்டிலும் அதிகார பரவலாக்கத்திற்கு வித்திட்டுள்ளது. இவ் அதிகாரப் பரவலாக்கின் விளைவுதான் இலங்கையின் மாவட்டச் செயலகம் ஆகும்;. இந்த வகையில் மாவட்ட செயலகத்தின் தோற்றத்துக்கான பின்னணி, நோக்கம், நிர்வாக கட்டமைப்பு, அதன் செயற்பாடுகள், மாவட்ட செயலகம் எதிர்நோக்கும் சவால்கள், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக இலங்கையின் பொதுநிர்வாகத்தில் மாவட்டச் செயலகம் என்ற கட்டுரை அமைந்துள்ளது. 
அரசின் அதிகாரம் முழுமையாக ஒரு இடத்தில் குவிந்தால் மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றமுடியாது. இதனால


சிவசுப்ரமணியம், த ( தம்பு-சிவா)
Sivasubramaniam, T

இந்தத் தொகுதியைத் தந்துள்ள தம்பு சிவா அவர்கள் இதழியலில் நீண்டகால அனுபவ வீச்சைக் கொண்டவர். சளைத்தலின்றி எழுதிக் கொண்டிருக்கும் ஆற்றல் அவரிடத்து மேலும் விசை பெற்றுள்ளது.

இத்தொகுதியில் இடம்பெற்ற அனைத்துக்கதைகளும்  'வெளிமலர்ச்சி நடப்பியல்' சார்ந்தவையாகவுள்ளன. நாளாந்த வாழ்விலே நடப்பவற்றையும் 
கண்டு அனுபவித்தவற்றையும், ஈடுபாட்டுடன் 
நுகர்ந்து கொண்டவற்றையும் உணர்ச்சிகளை ஏற்றித்தருதல் கதைகளிலே காணப்படும் இயல்பாகின்றது. 
நடப்பியலும் உணர்ச்சியியலும், உள்ளுணர்வும் 
வெளிமலர்ச்சி நடப்பியலை நோக்கி நகர்த்துகின்றன.  
வாழ்க்கையின் சம்பவத் துணிக்கைகள் ஒவ்வொரு கதையிலும் நிலைமாற்றம் செய்யப்படும் பொழுது நடப்பு நிலவரங்கள் 
சிலாகித்து மேலெழுந்து நிற்கின்றன.
கதையின் எடுத்துரைப்பு வழியாக 
வாழ்க்கை மற்றும் சமகாலத்தைய சூழல் பற்றிய