புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

உயர் கல்விச் சிந்தனையை வெகுஜனமயமாக்கல்

பாடசாலைக் கல்வியின் அவசியம், முக்கியத்துவம் என்பன பற்றிபொதுவாக மக்கள் அனைவரும் அறிந்துள்ளனர். அது பற்றி அவர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு உண்டு என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியும். அதனை எடுத்துக்காட்டும் ஒரு முக்கிய குறிகாட்டி ஆரம்ப, இடைநிலைக் கல்விநிலையில் காணப்படும் உயர்ந்த மாணவர் சேர்வு வீதமாகும். ஆரம்பக்கல்வி நிலையில் இவ்வீதம் 100 ஐ அண்மித்து விட்டது. 
எவ்வாறாயினும் இன்று எழுச்சி பெற்றுவரும் அறிவுப் பொருளாதாரம், அறிவுச் சமூகம் போன்ற சிந்தனைகள் பாடசாலைக் கல்வியோடு உயர்கல்வியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றன. அறிவுப் பொருளாதாரம் உலகளாவிய அறிவை உள்வாங்குதல், புதிய அறிவை உருவாக்குதல், அறிவைப் பொருளுற்பத்திக்குப் பயன்படுத்தல், அறிவை சேமித்து முகாமை செய்தல் போன்றவற்றை வலியுறுத்துவதால் பல்கலைக்கழகக்கல்வி முக்கியத்துவம் பெறுகின்றது. யாவருக்கும் பாடசாலைக் கல்வி என்பது போல் யாவருக்கும் உயர்கல்வி என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது. மேலைநாடுகளில் இளைஞர்களில் 60-80 சதவீதமானவர்கள் உயர்கல்வியில் பங்கு பெறுவதால் அங்கு உயர்கல்வி வெகுஜனமயமாகி விட்டதாகக் கூறப்படுகின்றது. உயர்கல்வியில் ஆயளள hiபாநச நனரஉயவழைnஇ ஆயளளகைiஉயவழைnஇ னநஅழஉசயவணையவழைn என்னும் எண்ணக்கருக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மரபுவழி உள்வாரிப் பல்கலைக்கழகங்கள் இவ்வாறான விரிவான உயர்கல்வியை வழங்க முடியாது என்பதால் இன்று விரிவான தொலைக் கல்வி ஏற்பாடுகளும் இணைய வழி உயர்கல்வியும் ஊக்குவிக்கப்படு கின்றன. இப்புதிய நிறுவனங்களில் இலட்சக்கணக்கானவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளைப


சு.சுசீந்திரராஜா
Suseendirarajah, S Prof

சுவாமிநாதன் சுசீந்திரராஜா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மொழியியில் மற்றும் ஆங்கித்துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் இருந்து பணி ஓய்வு பெற்றவர். இவர் 1960 இல் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் மாணவராக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பயின்று முனைவர் பட்டம் பெற்றவர். 

இவர் மொழியியல் கற்கையில் ஆழமும் விரிவும் மிக்க புலமையாளர். இத்துறைசார் கல்விப் புலத்தின் மூத்த பேராசிரியர், ஆய்வாளர். தொடர்ந்து பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றியவர். இவர் மரபுவழி இலக்கணக்கூறுகளோடு நவீன மொழியியல் கருத்துக்கையும் இணைத்து தற்கால தமிழ்மொழியின் இலக்கண அமைப்பை ஆராயும் பண்பு கொண்டவர். மொழியல் புலமைவழி நின்று தமிழியலை நோக்கும் புது மரபுக்கு தடம் அமைத்திருப்பவர். தமிழ் இலக்கணம் கற்கு