புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சாடிகள் கேட்கும் விருட்சங்கள்

சில நாட்களின் முன்னர் கனடாவில் வாழும் எனது ஊரவரும் நண்பருமான மோகன் இலங்கையில் இருந்து என்னைத் தொலைபேசியில் அழைத்துக் கவிஞர் முகிலனை அறிமுகம் செய்து வைத்தார்.
நான் சிலகாலமே அனுபவித்த நெடுந்தீவின் காவிய வாழ்வை முழுமழியாக வாழக் கொடுத்து வைத்தவர். அவர் சில வருடங்கள் நான் படித்த நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் படித்திருக்கிறார். நானும் என்னுடைய தோழர்களும் தோழியர்களும் ஆடியும் பாடியும் கூடியும் திரிந்த வீதிகளிலும் புல்வெளிகளிலும் கடற்கரைகளிலும் தனது தோழ தோழியருடன் என்னைவிட அதிக காலம் செளித்திருக்கிறார். நான் படிக்க விரும்பி வாய்க்காதுபோன ஊடகத்துறை பயில்கிறார். 
போரின் மத்தியிலும் வாழ்வு முகிலனுக்கு என்னைவிட அதிக வாய்ப்புக்களைக் கொடுத்திருக்கிறது. 
எனக்கு கவிதை தந்த மண்ணில் நிரந்தரமாக வாழும் முகிலன் மீது எனக்கு ஒருவகையில் பொறாமை ஏற்படுகிறது. அது ஏனென்று கேட்டால் நான் என்ன சொல்லக்கூடும்?
எனது தீவகத்துக்கு முதன் முதலில் வந்தபோது எனக்கு பாலப் பருவம் முடியவில்லை. எனது தந்தையார் நெடுந்தீவு என் தாயாரின் தந்தையாரும் நெடுந்தீவு, என் தாய்வழிப் பாட்டிக்கு தாய் நெடுந்தீவு தந்தையார் உடுவில், உடுவில் எனக்கு குருவிக்கூடுபோல. அப்பதான் சிறகுவிரித்த பறவைக் குஞ்சைப்போல சின்னஞ்சிறு வயதில் நான் நெடுந்தீவுக்கு வந்து சேர்ந்தேன். முதற்காதலின் காவிய வாழ்வு எனக்கு அங்குதான் வாய்த்தது. அங்கு என்னை அரவணைத்த நீலக் கடலும் நீல வானமும் வரட்சிக்கு அடங்காது பசும்கொடி தூக்கும் மண்ணும் ஒன்றில் காதலில் சா அல்லது மோதலில் சா என்று (எங்கள் ஊரில் இதை கொஞ்சம் கொச்சை


தை.தனராஜ்
Thanaraj, T

தையல்முத்து தனராஜ் மாணவ ஆசிரியராகத் தனது கல்விப் பணியினை ஆரம்பித்தவர். தொடர்ந்து ஆசிரியர் கலாசாலை, பல்கலைக்கழகம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பட்டங்கள் பெற்றுத் தனது தகுதியை, ஆளுமையை வளர்த்துக்கொண்டவர். பன்னாட்டு கல்விசார் பயிற்சிகளிலும் கல்வி மாநாடுகளிலும் பங்குபற்றியவர். 

இன்று கல்வியியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராகவும், வளவாளராகவும், ஆய்வாளராகவும் பரிணமித்து வருபவர். கற்றல், தேடல், ஆய்வு என்பதை தனது பண்புசார் கோலங்களாக வெளிப்படுதுபவர். தமிழ்மொழி மூலமான கல்விச்சூழல், புலமைத்துவம் தொடர்பான அகல்விரி சிந்தனைகளையும், விமரிசனங்களையும் மற்றும் நடைமுறைகளையும் தன்னகத்தே கொண்டு இயங்குபவர்.