புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்வியில் எழு வினாக்கள்

எழுவினாக்கள் எழுபொருள்கள் எனவும் குறிப்பிடப்படும். கல்விச் செயல்முறையின் விரைந்த மாற்றங்களுடன் பிரச்சினை களும் தொடர்ந்து மேலெழுந்த வண்ணமிருக்கும். பிரச்சினைகளைக் குவியப்படுத்தும் கருத்தாடல்கள் செல்லும் வழியைச் செம்மைப் படுத்த உதவும்.
எழுபொருள்களின் கருத்தாடல் முக்கியத்துவத்தை அறிந்து பல்கலைக்கழகங்களும் ஆசிரிய கலாசாலைகளும், கல்வியியற் கல்லூரிகளும் தத்தமது பாடத்திட்டங்களில் இதனை உள்ளடக்கி வருகின்றார்.
கல்வியியல் சார்ந்த கருத்துக்களையும், முன்மொழிவுகளையும் திறனாய்வின்றி உள்வாங்கும் அறிவூக்கமற்ற நிலையிலிருந்து விடுபட வைப்பதற்குரிய கருத்தாடல்கள் பலநிலைகளிலும் வேண்டப்படு கின்றன. திறனாய்வும், மீள்வாசிப்பும் இன்றி முன்னேற்றங்களை எட்ட முடியாது.
கல்வியியல் அதற்கென உரிய தனித்துவமான சொல்லாடல் களைக் கொண்டுள்ளது. அறிவு நீண்டு வளர்ந்து செல்லும்பொழுது அதற்குரிய புதிய புதிய கலைச்சொற்களும் தோற்றம்பெற்ற வண்ண மிருக்கும். அந்த நடப்பியலைப் புரிந்துகொள்ளும் பொழுது புதிய சொற்கள் மலைப்பை உண்டாக்காது மகிழ்ச்சியை உண்டாக்கும். சொற்பெருக்கு மொழி வளர்ச்சியின் சுட்டியாகும். 
இந்நூலாக்கத்துக்குத் துணை புரிந்த நண்பர்களும், சேமமடு பதிப்பகத்தினரும் நன்றிக்குரியவர்கள். பயனுள்ள நூல்களைத் தந்த பிரித்ததானிய கழக நூலகத்தினருக்கும் நன்றி
சபா.ஜெயராசா


செ.சிவலிங்கம்
Sivalingam, S

ஈழநாட்டிலே கந்தப்புராண வசனந் தோன்றியுள்ளது. கந்தப்புராணத்திற்கு பல அறிஞர்கள் உரையெழுதியுள்ளனர். நாமறிந்த வரையிலே கந்தப்புராணத்தைச் சுறுக்கிச் செய்யுலாகச் செய்த ஒரேயொரு தமிழறிஞர் பண்டிதர் சிவலிங்கம் அவர்களேயெனலாம்.
யாப்பறி புலவனான பண்டிதர் சிவலிங்கம் அவர்கள் கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு அருகே வைத்து ஆராயப்பட வேண்டியவர். இறைபக்தியும் புலமை பாரம்பரியமுங் கொண்ட ஒருவராலேதான் இத்தகைய முயற்சியிலீடுப்பட முடியும். இந்த இரண்டும் பண்டிதர் சிவலிங்கத்திற்கு வாய்த்திருக்கின்றன. இவரின் செய்யுள்களை நோக்கும் போது இவர் '  ஆழ்ந்திருக்கும் கவியுளம்' கண்டவராக கணிக்கப்படுகின்றார். 
கந்தப்புராணம் என்னும் கடலை இலகுவாகக் கடக்க உதவும் படகாக இவரின் 'கந்தப்புராணச்சுறுக்கம்'  என்னும் நூல் அமைகின்றது. பண்டிதர் சிவலிங்கம் கவிதை கலை கைவந்தவர்  என்பதற்கு இந்நூல் ச