புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சமகாலக் கல்வி முறைகளின் சில பரிமாணங்கள்

ஆசிரியர்களுக்கான தொழில்முறைக்கல்வி 'கல்வியியல்' எனப் பொதுவாகச் சுட்டப்பட்டாலும் அதில் ஏராளமான துணை நெறிகள் உண்டு. கல்வி உளவியல், கல்விச் சமூகவியல், பொதுக்கற்பித்தலியல், கல்வி மதிப்பீடு, கல்வித்தத்துவம் எனப் பலவாறாக விரிந்து செல்லும் கல்வியியலின் ஒரு பிரதான துணைப்பிரிவு 'ஒப்பியல் கல்வி' ஆகும். உலக நாடுகளின் கல்வி முறைகளின் போக்குகள், வளர்ச்சிகள் என்பன இதில் முறையாக, வரலாற்று ரீதியாக ஆராயப்படுவதும் அவ்வாறான போக்குகளுக்கும் வளர்ச்சிகளுக்குமான காரணங்கள், அவற்றில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் பற்றிய ஆய்வு ரீதியான நோக்கு இக்கற்கை நெறியின் உள்ளடக்கமாகும்.
ஆசிரியர்கள் மட்டுமன்றி இலங்கையின் கல்விமுறை தொடர்பாகக் கொள்கையாக்கம் மற்றும் சீர்திருத்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ள உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அறிஞர்களும் ஒப்பீட்டுக்கல்வியில்; ஆர்வம் கொண்டவர்கள்; இலங்கையின் கல்வி வளர்ச்சி பற்றிய நிதானமான மதிப்பீட்டைச் செய்ய, ஏனைய வளர்முக நாடுகள், குறிப்பாக அயலில் உள்ள தென்னாசிய, தென்கிழக்காசிய மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளின் கல்விமுறை பற்றிய அறிவும் தெளிவும் தேவை. இவ்வாறான பின்புலத்திலேயே இலங்கையின் கல்வி வளர்ச்சி பற்றிய மதிப்பீடுகளைச் செய்வதோடு, எதிர்கால வளர்ச்சிக்கான கொள்கைகள், சீர்திருத்தங்கள் தொடர்பாகக் காத்திரமாக சிந்திக்க முடியும்.
இவ்வகையில், உலக நாடுகளின் கல்வி மற்றும் இலங்கையின் கல்வி வளர்ச்சி தொடர்பான கட்டுரைகளைக் கொண்ட இந்நூல் ஆசிரியர்களுக்கும் கல்வித்துறையின் மேம்பாட்டுக்காக உழைத்து வரும் மற்றோருக்கும் பயன்படும் என நம்


மா.செல்வராஜா
M.Selvarajah

மட்டக்களப்பு மாநிலம் தந்த கல்வியாளுமை மா.செல்வராஜா. இவர் மட்டக்களப்பு கல்விப்பரம்பரியத்தின் தனித்துவமாக விளங்கும் இராமகிருஸ்ண மிஷன் மற்றும் சிவானந்தாக் கல்லூரியின் வளத்தையும் தளத்தையும் முழுமையாகத் தனதாக்கிக் கொண்டவர். தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழக மரபு வழியில் தோய்ந்து வளர்ந்து வந்தவர்.
கல்விப்புலத்தில் ஆசிரியர், அதிபர், விரிவுரையாளர், பேராசிரியர், ஆய்வாளர் என்ற வகிபாக மேலேழுச்சியில் பல உன்னதங்கள் கண்டடைந்தவர். கிழக்கு பல்கலைக்கழகத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவராக விளங்கியவர். குறிப்பாக மட்டக்களப்பு கல்வியியல்  'சமுகப் பரிமாணம்' பெற முழு மூச்சுடன் உழைத்து வருபவர். இதனால் உள்ளுர்க் கல்விச் சிந்தனை மூலங்களுக்கான சமூகத் தரிசனத்தையும் வெளிப்படுத்துபவர்.
கல்வி முகாமைத்துவம் தொடர்பான பாரம்பரிய அணுகுமுறைகள் சார்ந்து சிந்தனைகள், ஆய்வுகள் தாண்டி